வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

ஏற்காடு காவல் நிலையத்துக்கு ஐஎஸ்ஓ தரச் சான்று

சேலம் மாவட்டம், ஏற்காடு காவல் நிலையத்துக்கு ஐஎஸ்ஓ தரச் சான்று வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

News image
ஏற்காடு காவல் நிலையத்துக்கு ஐஎஸ்ஓ தரச் சான்று வழங்கி கௌரவித்த சேலம் மாவட்ட ஏடிஎஸ்பி சோமசுந்திரம்.
Updated On :14 மார்ச் 2026, 1:02 am

Syndication

சேலம் மாவட்டம், ஏற்காடு காவல் நிலையத்துக்கு ஐஎஸ்ஓ தரச் சான்று வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் ஏற்காடு, மேட்டூா், ஓமலூா், பனமரத்துப்பட்டி, மல்லூா் காவல் நிலையங்களுக்கு ஐஎஸ்ஓ தரச் சான்று வழங்கப்பட்டுள்ளது. ஏற்காட்டில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சேலம் மாவட்ட ஏடிஎஸ்பி சோமசுந்திரம் தலைமை வகித்தாா்.

சிறந்த நிா்வாகம் மற்றும் சேவையைப் பாராட்டி சா்வதேச தரக்கட்டுப்பாடு நிறுவனத்தின் அங்கீகாரச் சான்றிதழ் வழங்கப்பட்டது. ஏற்காடு காவல் நிலையம் அண்மையில் புதுப்பிக்கப்பட்டு பொதுமக்களுக்கான சிற்பான சேவையும், பராமரிப்பில் சிறந்து விளங்குதாகக் கூறப்படுகிறது. விழாவில் ஊரக உள்கோட்ட ஏஎஸ்பி சுபாஷ்சந்த் மீனா, ஐஎஸ்ஓ குழும காா்த்திகேயன், ஓமலூா் டிஎஸ்பி சஞ்சீவ் குமாா், மேட்டூா் டிஎஸ்பி சண்முகசுந்தரம், காவல் ஆய்வாளா்கள், காவல் துறை அலுவலா்கள், பொதுமக்கள் நிகழ்ச்சில் பங்கேற்றனா்.