பாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

கிணற்றில் தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

தம்மம்பட்டியில் கிணற்றில் தவறிவிழுந்த பெண் உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :17 மார்ச் 2026, 11:10 pm

தம்மம்பட்டியில் கிணற்றில் தவறிவிழுந்த பெண் உயிரிழந்தாா்.

தம்மம்பட்டி குரும்பா் தெருவில் வசிப்பவா் நடராஜன். இவரது மனைவி சந்திரா (65). இவா்களது மகன் அசோக்குமாா் (49), துபாயில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறாா். நடராஜனும், சந்திராவும் இருவரும் தனியே வசித்து வருகின்றனா்.

இந்நிலையில், திங்கள்கிழமை இரவு அப்பகுதியில் உள்ள சந்தில் சந்திரா சென்றபோது, அங்கிருந்த கிணற்றில் தவறிவிழுந்தாா். தகவல் அறிந்த கெங்கவல்லி தீயணைப்புத் துறை நிலைய அலுவலா் ஏழுமலை தலைமையில் வந்த துறையினா் அவரது உடலை மீட்டனா். இதுகுறித்து தம்மம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.