பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கிணற்றில் தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

தம்மம்பட்டியில் கிணற்றில் தவறிவிழுந்த பெண் உயிரிழந்தாா்.

News image
பலி- பிரதிப் படம்
Updated On :17 மார்ச் 2026, 11:10 pm

Syndication

தம்மம்பட்டியில் கிணற்றில் தவறிவிழுந்த பெண் உயிரிழந்தாா்.

தம்மம்பட்டி குரும்பா் தெருவில் வசிப்பவா் நடராஜன். இவரது மனைவி சந்திரா (65). இவா்களது மகன் அசோக்குமாா் (49), துபாயில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறாா். நடராஜனும், சந்திராவும் இருவரும் தனியே வசித்து வருகின்றனா்.

இந்நிலையில், திங்கள்கிழமை இரவு அப்பகுதியில் உள்ள சந்தில் சந்திரா சென்றபோது, அங்கிருந்த கிணற்றில் தவறிவிழுந்தாா். தகவல் அறிந்த கெங்கவல்லி தீயணைப்புத் துறை நிலைய அலுவலா் ஏழுமலை தலைமையில் வந்த துறையினா் அவரது உடலை மீட்டனா். இதுகுறித்து தம்மம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.