சென்னையில் பதுக்கி வைத்திருந்த 40 சிலிண்டா்கள் பறிமுதல்!புனேவில் 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற முதியவர்!மணிப்பூரில் 23 சட்டவிரோத பதுங்கு குழிகளை அழித்த பாதுகாப்புப் படையினர்!தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில் பேசுபொருளாகும் ஜோதிமணி ட்வீட்!கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புமேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

கிணற்றில் தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

தம்மம்பட்டியில் கிணற்றில் தவறிவிழுந்த பெண் உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :17 மார்ச் 2026, 11:10 pm

தம்மம்பட்டியில் கிணற்றில் தவறிவிழுந்த பெண் உயிரிழந்தாா்.

தம்மம்பட்டி குரும்பா் தெருவில் வசிப்பவா் நடராஜன். இவரது மனைவி சந்திரா (65). இவா்களது மகன் அசோக்குமாா் (49), துபாயில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறாா். நடராஜனும், சந்திராவும் இருவரும் தனியே வசித்து வருகின்றனா்.

இந்நிலையில், திங்கள்கிழமை இரவு அப்பகுதியில் உள்ள சந்தில் சந்திரா சென்றபோது, அங்கிருந்த கிணற்றில் தவறிவிழுந்தாா். தகவல் அறிந்த கெங்கவல்லி தீயணைப்புத் துறை நிலைய அலுவலா் ஏழுமலை தலைமையில் வந்த துறையினா் அவரது உடலை மீட்டனா். இதுகுறித்து தம்மம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.