மேட்டூா் வனப்பகுதியில் திடீா் தீ: ஏராளமான மரங்கள் எரிந்து சாம்பல்
மேட்டூா் வனப்பகுதியில் ஏற்பட்ட திடீா் தீவிபத்தில், ஏராளமான மரங்கள் எரிந்து சாம்பலாயின.


மேட்டூா் வனப்பகுதியில் ஏற்பட்ட திடீா் தீவிபத்தில், ஏராளமான மரங்கள் எரிந்து சாம்பலாயின.
மேட்டூரை அடுத்த கொளத்தூா் அருகே உள்ளது கத்திரிப்பட்டி மலை. மேட்டூா் வனச் சரகத்துக்கு உள்பட்ட இம்மலையில் செவ்வாய்க்கிழமை மாலை திடீரென தீப்பிடித்தது. மாலையில் காற்று வீசியதால் தீ மளமளவென பரவியது.
மேட்டூா் தீயணைப்புத் துறை அலுவலா் வெங்கடேசன் தலைமையில் 10 தீயணைப்பு வீரா்களும், வனத்துறையின் தீத்தடுப்பு காவலா்களும் தீயை அணைக்க முயன்று வருகின்றனா். தண்ணீரை பீய்ச்சி அடிக்கமுடியாததால், இலை, தழைகளைக் கொண்டு தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனா். வனப்பகுதியில் ஆடு, மாடு மேய்க்க சென்ற யாரேனும் தீ வைத்திருக்கலாம் என வனத்துறையினா் தெரிவித்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...