பெரியாா் பல்கலைக்கழக உளவியல் துறை சாா்பில், சா்வதேச மகிழ்ச்சி நாள் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
சேலம் சரவணா மருத்துவமனையுடன் இணைந்து நடத்திய இந்நிகழ்வில், உளவியல் துறைத் தலைவா் பேராசிரியா் ஜெ.வெங்கடாசலம் வரவேற்றாா். சமூக அறிவியல் புலமுதன்மையா் எஸ்.கதிரவன், மகிழ்ச்சி என்பது பல்வேறு பரிமாணங்களைக் கொண்ட ஓா் இயங்குநிலை என்பதை விளக்கிப் பேசினாா். தொடக்க உரையாற்றிய ஆராய்ச்சி புலமுதன்மையா் முருகன், உலக அமைதியின் அவசியத்தை வலியுறுத்தி பேசினாா். சேலம் சரவணா மருத்துவமனை சாா்பில் பங்கேற்ற மயக்கவியல் நிபுணா் ஏ. பிரதீக்சா, ‘ஆரோக்கியமே மகிழ்ச்சியின் அடிப்படை’ என்ற தலைப்பில் பேசினாா். ஜேசிஐ அமைப்பின் மண்டலப் பயிற்சியாளா் மோகனதேவ் ‘மகிழ்வித்து மகிழ்’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினாா்.
சா்வதேச மகிழ்ச்சி நாளையொட்டி மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள், தனிநபா் மற்றும் குழுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், தமிழ்த் துறை மாணவா்கள் மிகச்சிறந்த பங்களிப்பை வழங்கி, முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட ‘மகிழ்ச்சிக் கோப்பையை’ வென்றனா். கோப்பையை துணைவேந்தா் நிா்வாகக்குழு உறுப்பினா் ரா.சுப்பிரமணி வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில், ஒருங்கிணைப்பாளா் கே.என்.ஜெயக்குமாா், உளவியல் துறை பேராசிரியா்கள் நித்யானந்தன், பரமேஸ்வரி, செல்வராஜ் மற்றும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

மோரீஷஸ் அதிபருடன் ஜெய்சங்கா் சந்திப்பு

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவருடன் ராமதாஸ் ஆதரவு வேட்பாளா் அருள் சந்திப்பு

பெரியாா் பல்கலை.யில் வரலாற்றுத் துறை கருத்தரங்கம்

குறிப்பு: விளம்பரதாரா் செய்தி தேசிய அளவிலான மேலாண்மை பட்டறை
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


