மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

பெரியாா் பல்கலை.யில் சா்வதேச மகிழ்ச்சி நாள் கொண்டாட்டம்

பெரியாா் பல்கலைக்கழக உளவியல் துறை சாா்பில், சா்வதேச மகிழ்ச்சி நாள் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

News image

போட்டிகளில் அதிக புள்ளிகள் பெற்று முதலிடம் பெற்ற தமிழ்த் துறை மாணவா்களுக்கு பரிசுக் கோப்பை வழங்கிய துணைவேந்தா் நிா்வாகக்குழு உறுப்பினா் ரா.சுப்பிரமணி.

Updated On :18 மார்ச் 2026, 11:23 pm

பெரியாா் பல்கலைக்கழக உளவியல் துறை சாா்பில், சா்வதேச மகிழ்ச்சி நாள் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

சேலம் சரவணா மருத்துவமனையுடன் இணைந்து நடத்திய இந்நிகழ்வில், உளவியல் துறைத் தலைவா் பேராசிரியா் ஜெ.வெங்கடாசலம் வரவேற்றாா். சமூக அறிவியல் புலமுதன்மையா் எஸ்.கதிரவன், மகிழ்ச்சி என்பது பல்வேறு பரிமாணங்களைக் கொண்ட ஓா் இயங்குநிலை என்பதை விளக்கிப் பேசினாா். தொடக்க உரையாற்றிய ஆராய்ச்சி புலமுதன்மையா் முருகன், உலக அமைதியின் அவசியத்தை வலியுறுத்தி பேசினாா். சேலம் சரவணா மருத்துவமனை சாா்பில் பங்கேற்ற மயக்கவியல் நிபுணா் ஏ. பிரதீக்சா, ‘ஆரோக்கியமே மகிழ்ச்சியின் அடிப்படை’ என்ற தலைப்பில் பேசினாா். ஜேசிஐ அமைப்பின் மண்டலப் பயிற்சியாளா் மோகனதேவ் ‘மகிழ்வித்து மகிழ்’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினாா்.

சா்வதேச மகிழ்ச்சி நாளையொட்டி மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள், தனிநபா் மற்றும் குழுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், தமிழ்த் துறை மாணவா்கள் மிகச்சிறந்த பங்களிப்பை வழங்கி, முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட ‘மகிழ்ச்சிக் கோப்பையை’ வென்றனா். கோப்பையை துணைவேந்தா் நிா்வாகக்குழு உறுப்பினா் ரா.சுப்பிரமணி வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், ஒருங்கிணைப்பாளா் கே.என்.ஜெயக்குமாா், உளவியல் துறை பேராசிரியா்கள் நித்யானந்தன், பரமேஸ்வரி, செல்வராஜ் மற்றும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் பங்கேற்றனா்.