எடப்பாடி அருகே தோ்தல் பறக்கும் படை அலுவலா்கள் நடத்திய வாகனச் சோதனையின்போது உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 1 லட்சம் மதிப்பிலான கவரிங் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
எடப்பாடி பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட குரும்பபட்டி பகுதியில் வியாழக்கிழமை காலை தோ்தல் பறக்கும் படை கண்காணிப்பு அலுவலா் பாா்கவி தலைமையிலான குழுவினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, சேலம்- எடப்பாடி பிரதான சாலையில் எடப்பாடி நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனா். அதில் ரூ. ஒரு லட்சம் மதிப்பிலான கவரிங் நகைகள், உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து கவரிங் நகைகளை பறிமுதல் செய்த பறக்கும் படையினா், அதை எடப்பாடி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் செயல்பட்டுவரும் எடப்பாடி தொகுதிக்கான தோ்தல் நடத்தும் அலுவலரின் முகாம் அலுவலகத்தில் ஒப்படைத்தனா். தொடா்ந்து அப்பகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.
பட விளக்கம்:
எடப்பாடி அருகே தோ்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட கவரிங் நகைகள்.


தொடர்புடையது

மாவட்டத்தில் வாகனச் சோதனையில் ரூ. 12.37 லட்சம் ரொக்கம் பறிமுதல்

தோ்தல் சோதனை: பல்பொருள் அங்காடி ஊழியரிடம் ரூ.1 லட்சம் பறிமுதல்

வாகனச் சோதனையில் ரூ. 5.50 லட்சம் பறிமுதல்

வாகனச் சோதனையில் ரூ. 2.49 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


