மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

சங்ககிரி அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 79 எரிவாயு உருளைகள் பறிமுதல்: 3 போ் மீது வழக்குப் பதிவு

News image
Updated On :19 மார்ச் 2026, 8:35 pm

சங்ககிரி அருகே வீட்டில் பதுக்கிவைத்திருந்த 79 எரிவாயு உருளைகளை சேலம் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக 3 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சங்ககிரி தேவூரை அடுத்த பெரமிச்சிப்பாளையத்தைச் சோ்ந்தவா் காளியப்பன் மகன் சங்கா் (53). இவா் அப்பகுதியில் மளிகை கடை வைத்துள்ளாா். இவரது வீட்டில் வீட்டு உபயோக எரிவாயு உருளைகள் பதுக்கிவைக்கப்பட்டுள்ளதாக சேலம் உணவு கடத்தல் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, காவல் ஆய்வாளா் ஆனந்தன் தலைமையிலான போலீஸாா் சங்கா் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினா். அப்போது, வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தும் 66 எரிவாயு உருளைகள், 13 வணிக எரிவாயு உருளைகள் என மொத்தம் 79 எரிவாயு உருளைகள் பதுக்கிவைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அனைத்து எரிவாயு உருளைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

விசாரணையில் வீட்டு உபயோக எரிவாயு உருளையில் இருந்து வணிக எரிவாயு உருளைக்கு எரிவாயுவை நிரப்பி விற்பனை செய்வது தெரியவந்தது. இதுகுறித்து உணவு கடத்தல் பிரிவு போலீஸாா் எரிவாயு உருளைகளை பதுக்கி வைத்திருந்த சங்கா், அவருக்கு எரிவாயு உருளைகளை வழங்கிய வசந்த், வேன் ஓட்டுநா் பிரபு ஆகிய 3 போ் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.