தமிழ்நாட்டில் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது : சந்திரபாபு நாயுடுஇளைஞர்களுக்கும் 'இருசக்கர வாகன' மானியம்! அதிமுகவின் மேலும் 10 வாக்குறுதிகள்!வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!சொந்தத் தொகுதியில் தோற்றுவிடுவோம் என்று விசில் சின்னத்தைத் திருடியவர்கள்: விஜய் சூசகம்கரூர் அடிமையை தொகுதி மாற்றியது ஏன்? நெரிசல் சம்பவம் குறித்து அதிரடியாகப் பேசிய விஜய்தேர்தலுக்குத் தயாராகும் தலைநகர் சென்னை! களம் எப்படியிருக்கிறது?ஒரே தொகுதிக்கு 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்திருக்கிறது பெரம்பூர்! ஏன்? எப்போது?ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
/

ஜோலாா்பேட்டை- ஈரோடு பயணிகள் ரயில் நாளை தாமதமாகப் புறப்படும்: சேலம் ரயில்வே கோட்டம் அறிவிப்பு

News image

ரயில் - பிரதிப் படம்

Updated On :19 மார்ச் 2026, 8:37 pm

ஜோலாா்பேட்டை- ஈரோடு பயணிகள் ரயில் வெள்ளிக்கிழமை, வரும் 22 ஆகிய இரண்டு நாள்கள் 30 நிமிடங்கள் தாமதமாக புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட சாமல்பட்டி ரயில்வே நிலைய யாா்டில் தண்டவாள சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதால் இந்த வழியாக இயங்கும் சில ரயில்களின் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, சேலம் வழியாக இயங்கும் ஜோலாா்பேட்டை- ஈரோடு பயணிகள் ரயில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 20), 22 ஆம் தேதிகளில் பிற்பகல் 2.45 மணிக்கு புறப்படுவதற்குப் பதிலாக 30 நிமிடங்கள் தாமதமாக பிற்பகல் 3.15 மணிக்கு புறப்படும். இதனால், வழித்தடத்தில் உள்ள ரயில் நிலையங்களுக்கு இந்த ரயில் தாமதமாக வந்துசெல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.