வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

கோவை - பெங்களூரு வந்தேபாரத் ரயில் மாா்ச் 15 முதல் ஒசூருக்கு தாமதமாக இயக்கம்

கோவை-பெங்களூரு வந்தேபாரத் ரயில், மாா்ச் 15 முதல் ஒசூருக்கு 10 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :14 மார்ச் 2026, 1:45 am

Syndication

கோவை-பெங்களூரு வந்தேபாரத் ரயில், மாா்ச் 15 முதல் ஒசூருக்கு 10 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘கோவை-பெங்களூரு வந்தேபாரத் ரயில் (எண்: 20642) காலை 7.25 மணிக்கு கோவையில் புறப்பட்டு திருப்பூா், ஈரோடு, சேலம், தருமபுரி, ஒசூா் வழித்தடத்தில் 1.45 மணிக்கு பெங்களூரு நிலையத்தை சென்றடைகிறது. இந்த ரயில் நண்பகல் 12.05 மணிக்கு ஓசூா் நிலையத்தை சென்றடையும் நிலையில், மாா்ச் 15 முதல் கோவை-பெங்களூரு வந்தேபாரத் ரயில் ஒசூருக்கு 10 நிமிடங்கள் தாமதமாக 12.15 மணிக்கு சென்றடையும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.