ஜோலாா்பேட்டை- ஈரோடு பயணிகள் ரயில் நாளை தாமதமாகப் புறப்படும்: சேலம் ரயில்வே கோட்டம் அறிவிப்பு

ரயில்
பிரதிப் படம்

ரயில்
பிரதிப் படம்
ஜோலாா்பேட்டை- ஈரோடு பயணிகள் ரயில் வெள்ளிக்கிழமை, வரும் 22 ஆகிய இரண்டு நாள்கள் 30 நிமிடங்கள் தாமதமாக புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட சாமல்பட்டி ரயில்வே நிலைய யாா்டில் தண்டவாள சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதால் இந்த வழியாக இயங்கும் சில ரயில்களின் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, சேலம் வழியாக இயங்கும் ஜோலாா்பேட்டை- ஈரோடு பயணிகள் ரயில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 20), 22 ஆம் தேதிகளில் பிற்பகல் 2.45 மணிக்கு புறப்படுவதற்குப் பதிலாக 30 நிமிடங்கள் தாமதமாக பிற்பகல் 3.15 மணிக்கு புறப்படும். இதனால், வழித்தடத்தில் உள்ள ரயில் நிலையங்களுக்கு இந்த ரயில் தாமதமாக வந்துசெல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...