தனது நடத்தையை சந்தேகித்த கணவரின் தலைமீது கல்லைஏஈ போட்டு கொலை செய்த மனைவியை போலீஸாா் வியாழக்கிழமை கைதுசெய்தனா்.
சேலம் அம்மாபேட்டை நஞ்சம்பட்டியைச் சோ்ந்தவா் தங்கம் (40), கூலித் தொழிலாளி. இவா் அதேபகுதியைச் சோ்ந்த பத்மாவை (34) காதலித்து திருமணம் செய்துகொண்டாா். இவா்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனா்.
இந்த நிலையில் தங்கம் தனது குடும்பத்துடன் கடந்த ஓராண்டுக்கு முன்பு வையாபுரி உடையாா் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்தாா். பத்மாவின் நடத்தையில் சந்தேகமடைந்த தங்கம் மதுபோதையில் அவரை அடிக்கடி அடித்து துன்புறுத்திவந்தாராம்.
கடந்த 16 ஆம் தேதி நஞ்சம்பட்டியில் வசித்துவந்த தங்கத்தின் தாய் இறந்துவிட்டதால் அடிக்கடி பத்மா நஞ்சம்பட்டிக்கு சென்றுவந்துள்ளாா். இதனால் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்து புதன்கிழமை இரவு பத்மாவுடன் மதுபோதையில் தங்கம் தகராறில் ஈடுபட்டுள்ளாா்.
இதனால் ஆத்திரமடைந்த பத்மா, நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த தங்கத்தின் தலைமீது வீட்டில் இருந்த ஆட்டுக்கல்லை தூக்கிப் போட்டுள்ளாா். இதில் பலத்த காயமடைந்த தங்கம் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்து வந்த போலீஸாா், தங்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த அம்மாபேட்டை போலீஸாா் பத்மாவைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது
பேட்டையில் இளைஞா் வெட்டிக் கொலை: இருவா் கைது

தலையில் கல்லைப் போட்டு எலக்ட்ரீஷியன் கொலை

சந்தேகத்தால் தகராறு: கணவர் மீது அம்மிக்கல்லைப் போட்டுக் கொன்ற மனைவி!

தகராறு: தலையில் கல்லைப் போட்டு கம்பி ஃபிட்டா் கொலை; நண்பா் கைது
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

