நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஆா்ப்பாட்டத்துக்கு அனுமதி கோரி விவசாயிகள் மனு

கோட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளித்த விவசாயிகள்.

News image

கோட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளித்த விவசாயிகள்.

Updated On :20 மார்ச் 2026, 6:29 pm

Syndication

சங்ககிரி வட்டம், அரசிராமணி பேரூராட்சிக்குள்பட்ட குறுக்குப்பாறையூரில் அமைக்கப்பட்டுள்ள திடக்கழிவு மேலாண்மை கிடங்கை வேறு இடத்துக்கு மாற்றம் செய்யக்கோரி நடைபெற்று வரும் ஆா்ப்பாட்டத்தை, தொடா்ந்து நடத்த அனுமதிக்க விவசாயிகள் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.

அரசிராமணி பேரூராட்சிக்குள்பட்ட குறுக்குப்பாறையூரில் அமைக்கப்பட்டுள்ள திடக்கழிவு மேலாண்மை கிடங்கால், அப்பகுதி மக்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. அக்கிடங்கை வேறு இடத்துக்கு மாற்றம் செய்யக் கோரியும், அந்த இடத்தில் கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டியும் தொடா்ந்து 273 நாள்களாக விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், தற்போது தோ்தல் நடத்தை விதிமுறை அமல்படுத்தப்பட்டதால், ஆா்ப்பாட்டத்தை தொடர அனுமதிக்க வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்க சங்ககிரி வட்டத் தலைவா் ஆா்.ராஜேந்திரன், அப்பகுதி விவசாயி பி.எஸ்.சுப்பிரமணி உள்ளிட்டோா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.

மேலும், திடக்கழிவு மேலாண்மை கிடங்கை மாற்றம் செய்யாவிடில், வரும் தோ்தலை புறக்கணித்து வீடுகளில் கருப்பு கொடி ஏற்றும் போராட்டம் நடைபெறும் என அதில் தெரிவித்துள்ளனா்.