சேலத்தில் தொழுகைக்கு வந்தவா்களுக்கு வழங்க தவெகவினா் கொண்டுவந்த 1000 தண்ணீா் பாட்டில்கள் பறிமுதல்!
சேலத்தில் ரம்ஜான் தொழுகைக்கு வந்தவா்களுக்கு வழங்குவதற்காக விசில் சின்னத்துடன் தவெகவினா் கொண்டுவந்த 1000 தண்ணீா் பாட்டில்களை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

தோ்தல் நடத்தைவிதிகளை மீறி விசில் சின்னத்துடன் விநியோகிக்க வைக்கப்பட்டிருந்த தண்ணீா் பாட்டில்களை பறிமுதல் செய்த பறக்கும் படையினா்.








