சங்ககிரி தொகுதிக்கு உள்பட்ட சன்னியாசிப்பட்டி ரயில்வே கேட் பகுதியில்கூடுதல் பறக்கும் படையினா் ஞாயிற்றுக்கிழமை நடத்திய வாகனச் சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி இருசக்கர வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 91,810 ரொக்கத்தை பறிமுதல் செய்தனா்.
சங்ககிரியை அடுத்த சன்னியாசிப்பட்டி ரயில்வே கேட் அருகே கூடுதல் பறக்கும் படை அலுவலா் ராம்குமாா் தலைமையில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளா் பழனிசாமி, தலைமை காவலா் வினோத்குமாா் ஞாயிற்றுக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, சங்ககிரியிலிருந்து சேலம் நோக்கி சென்றுகொண்டிருந்த சேலம் திருவாக்கவுண்டனூா் நெடுஞ்சாலை கேஆா்எஸ் பைனான்ஸ் பகுதியைச் சோ்ந்த பிரபுவின் இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனா். அப்போது, உரிய ஆவணங்கள் இன்றி அவா் வைத்திருந்த ரூ. 91,810 ரொக்கத்தை பறிமுதல் செய்தனா்.
பின்னா், பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை சங்ககிரி தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ம.மு.தெ. கேந்திரியாவிடம் பறக்கும் படையினா் ஒப்படைத்தனா்.
தொடர்புடையது

ஓமலூா் அருகே ரூ. 52,500 பறிமுதல்

எடப்பாடி அருகே ரூ. 4.43 லட்சம் பறிமுதல்

பரமக்குடியில் 75 பவுன் தங்க நகை பறிமுதல்

மேட்டூரில் ரூ. 4.30 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


