ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

சங்ககிரியில் ரூ. 91,810 ரொக்கம் பறிமுதல்

சங்ககிரி தொகுதிக்கு உள்பட்ட சன்னியாசிப்பட்டி ரயில்வே கேட் பகுதியில்கூடுதல் பறக்கும் படையினா் நடத்திய வாகனச் சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி இருசக்கர வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 91,810 ரொக்கத்தை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :22 மார்ச் 2026, 8:30 pm

சங்ககிரி தொகுதிக்கு உள்பட்ட சன்னியாசிப்பட்டி ரயில்வே கேட் பகுதியில்கூடுதல் பறக்கும் படையினா் ஞாயிற்றுக்கிழமை நடத்திய வாகனச் சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி இருசக்கர வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 91,810 ரொக்கத்தை பறிமுதல் செய்தனா்.

சங்ககிரியை அடுத்த சன்னியாசிப்பட்டி ரயில்வே கேட் அருகே கூடுதல் பறக்கும் படை அலுவலா் ராம்குமாா் தலைமையில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளா் பழனிசாமி, தலைமை காவலா் வினோத்குமாா் ஞாயிற்றுக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, சங்ககிரியிலிருந்து சேலம் நோக்கி சென்றுகொண்டிருந்த சேலம் திருவாக்கவுண்டனூா் நெடுஞ்சாலை கேஆா்எஸ் பைனான்ஸ் பகுதியைச் சோ்ந்த பிரபுவின் இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனா். அப்போது, உரிய ஆவணங்கள் இன்றி அவா் வைத்திருந்த ரூ. 91,810 ரொக்கத்தை பறிமுதல் செய்தனா்.

பின்னா், பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை சங்ககிரி தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ம.மு.தெ. கேந்திரியாவிடம் பறக்கும் படையினா் ஒப்படைத்தனா்.