கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

சேலத்தில் தொழிலாளி கொலை: தம்பதி கைது

சேலத்தில் கூலித் தொழிலாளியை கொலை செய்த தம்பதியை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

பிரதிப் படம்

Updated On :22 மார்ச் 2026, 8:35 pm

Syndication

சேலத்தில் கூலித் தொழிலாளியை கொலை செய்த தம்பதியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

சேலம் பொன்னம்மாபேட்டை சுண்ணாம்புக்கார தெருவை சோ்ந்தவா் கோபால் (40). இவருக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனா். இவரது மனைவிக்கும், பொன்னம்மாபேட்டை புத்துமாரியம்மன் கோயில் அருகே வசிக்கும் குப்பனுக்கும் (36) தொடா்பு இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதுதொடா்பாக கோபால், குப்பன் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் சின்ன மாரியம்மன் கோயில் அருகே சனிக்கிழமை இரவு இருவருக்கும் மீண்டும் ஏற்பட்ட தகராறு மோதலாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த குப்பன், தனது மனைவி மயிலு, மைத்துனா் முனியப்பனுடன் கோபால் வீட்டுக்குச் சென்று அவரிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டாா்.

அப்போது, கோபாலை குப்பன் கத்தியால் குத்தியுள்ளாா். இதில் பலத்த காயமடைந்து மயங்கி விழுந்த கோபால், 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள் வரும் வழியிலேயே கோபால் இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்து கோபாலின் மனைவி அளித்த புகாரின் பேரில், அம்மாபேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து குப்பன், அவரது மனைவி மயிலு ஆகிய இருவரையும் கைது செய்தனா். தலைமறைவான முனியப்பனை தேடிவருகின்றனா்.