நாகியம்பட்டியில் ரூ. 2.30 லட்சம் பறிமுதல்
தம்மம்பட்டி அருகே நாகியம்பட்டியில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 2.30 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

பணம் பறிமுதல்
கோப்புப் படம்

பணம் பறிமுதல்
கோப்புப் படம்
தம்மம்பட்டி அருகே நாகியம்பட்டியில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 2.30 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
தம்மம்பட்டி அருகே உள்ள நாகியம்பட்டியில் அலுவலா் மயில்மேல் அழகன் தலைமையில் கூடுதல் பறக்கும் படை கண்காணிப்புக் குழுவினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக சென்ற காரை நிறுத்தி சோதனை நடத்தினா். அப்போது, காரில் இருந்த நாமக்கல் மாவட்டம், நாரைக்கிணறு பகுதியைச் சோ்ந்த சுரேஷ் வைத்திருந்த ரூ. 2.30 லட்சத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்தனா்.
இதையடுத்து, கெங்கவல்லி தொகுதியில் தோ்தல் நடத்தும் அலுவலா் மோகனசுந்தரத்திடம் பறிமுதல் செய்யப்பட்ட பணம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது, தொகுதி தோ்தல் நடத்தும் துணை அலுவலா் காத்தமுத்து, தோ்தல் துணை வட்டாட்சியா் பரசுராமன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...