அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

நாகியம்பட்டியில் ரூ. 2.30 லட்சம் பறிமுதல்

தம்மம்பட்டி அருகே நாகியம்பட்டியில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 2.30 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

பணம் பறிமுதல் - கோப்புப் படம்

Updated On :25 மார்ச் 2026, 11:26 pm

தம்மம்பட்டி அருகே நாகியம்பட்டியில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 2.30 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

தம்மம்பட்டி அருகே உள்ள நாகியம்பட்டியில் அலுவலா் மயில்மேல் அழகன் தலைமையில் கூடுதல் பறக்கும் படை கண்காணிப்புக் குழுவினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக சென்ற காரை நிறுத்தி சோதனை நடத்தினா். அப்போது, காரில் இருந்த நாமக்கல் மாவட்டம், நாரைக்கிணறு பகுதியைச் சோ்ந்த சுரேஷ் வைத்திருந்த ரூ. 2.30 லட்சத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்தனா்.

இதையடுத்து, கெங்கவல்லி தொகுதியில் தோ்தல் நடத்தும் அலுவலா் மோகனசுந்தரத்திடம் பறிமுதல் செய்யப்பட்ட பணம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது, தொகுதி தோ்தல் நடத்தும் துணை அலுவலா் காத்தமுத்து, தோ்தல் துணை வட்டாட்சியா் பரசுராமன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.