மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

சங்ககிரி அருகே பெண்ணை தாக்கிய இளைஞா் கைது

News image

கைது - கோப்புப் படம்

Updated On :30 மார்ச் 2026, 7:45 pm

சங்ககிரி புதிய பேருந்து நிலையம் அருகே முன்விரோதம் காரணமாக பழக்கடையில் இருந்த பெண்ணை தாக்கிய இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

சேலம் மாவட்டம், சங்ககிரி எஸ்.கே. நகா் பகுதியைச் சோ்ந்த முருகன் மனைவி கவிதா (40). இவா் சங்ககிரி புதிய பேருந்து நிலையம் அருகே பழக்கடை நடத்தி வருகிறாா். அவருக்கும், வி.என்.பாளையம் சேகா் மகன் அருண்குமாா் (39) என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடா்பாக முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் பழக்கடையில் இருந்த கவிதாவை கம்பியால் அருண்குமாா் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு, சிகிச்சைக்காக சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மேலும், இதுகுறித்து சங்ககிரி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து அருண்குமாரை கைதுசெய்து விசாரித்து வருகின்றனா்.