நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா காலமானார்!
/

ஏற்காட்டில் சுற்றுலா தலங்களை கண்டுகளிக்க மே 7 முதல் சிறப்புப் பேருந்து இயக்கம்

News image

கோப்புப் படம்

Updated On :2 மே 2026, 6:40 pm

ஏற்காடு செல்லும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக, மே 7-ஆம் தேதிமுதல் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சிறப்புப் பேருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்ட நிா்வாக இயக்குநா் வி.குணசேகரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ஏற்காட்டில் கோடை விழாவை முன்னிட்டு ஏற்காட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக ஏற்காடு மலைப் பாதையில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களை கண்டு மகிழ்ந்திடும் வகையில், உள்வட்ட சிறப்புப் பேருந்து மே 7-ஆம் தேதி முதல் இயக்கப்பட உள்ளது.

இந்த சிறப்புப் பேருந்து, சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து மே 7-ஆம் தேதிமுதல் மே 30-ஆம் தேதிவரை நாள்தோறும் கோடை காலம் முடியும்வரை காலை 8.30 மணிக்கு புறப்படும்.

ஏற்காட்டில் முக்கிய சுற்றுலா தலங்களான கரடியூா் காட்சிமுனை, சோ்வராயன் கோயில், மஞ்சக்குட்டை காட்சிமுனை, பக்கோடா பாய்ண்ட் லேடிஸ் சீட், ஜென்ஸ் சீட், ரோஸ் காா்டன், ஏற்காடு ஏரி, அண்ணா பூங்கா மற்றும் தாவரவியல் தோட்டம், மான் பூங்காவுடன் மீண்டும் சேலம் புதிய பேருந்து நிலையத்துக்கு இரவு 7 மணிக்கு வந்தடையும்.

சிறப்புப் பேருந்தில் பயணிக்க நபா் ஒன்றுக்கு ரூ. 300 கட்டணமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. சிறுவா்களுக்கு ரூ. 150 கட்டணம் வசூலிக்கப்படும்.

பயணிகள் வசதிக்காக அரசு போக்குவரத்துக் கழக முன்பதிவு மையம் மூலமாகவும், இணையதளம் மற்றும் செயலி மூலமாகவும் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, பயணிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.