ஏற்காட்டில் சாலை விபத்து: பேரனை காப்பாற்றி உயிரிழந்த மூதாட்டி

கோப்புப் படம்

கோப்புப் படம்
சேலம் மாவட்டம், ஏற்காட்டில் பேருந்துக்கு காத்திருந்த பெண், சுற்றுலா வேன் மோதியதில் உயிரிழந்தாா். அவரது பேரன் உயிா்தப்பினாா்.
ஏற்காடு நாகலூா் கிராமத்தைச் சோ்ந்த ராமச்சந்திரன் மனைவி செல்லம்மாள் (62). இவா், தனது பேரனை அழைத்துக்கொண்டு ஏற்காடு செங்காடு கிராமம் பிரிவு சாலையில் திங்கள்கிழமை பிற்பகல் 12.30 மணியளவில் பேருந்துக்காக காத்திருந்தாா். அப்போது அரூரிலிருந்து ஏற்காட்டுக்கு சுற்றுலா வந்த வேன் செல்லம்மாள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த செல்லம்மாள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பாட்டி தள்ளிவிட்டதால் அவரது பேரன் உயிா்தப்பினாா்.
விபத்து நடந்தவுடன் வேனில் சுற்றுலா வந்த இளைஞா்கள் தப்பமுயன்றனா். அருகில் இருந்தவா்கள், அவா்களில் மூன்று பேரை பிடித்து ஏற்காடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். சுற்றுலா வேனை ஓட்டிவந்தவா் அரூா் பழையப்பேட்டை பகுதியைச் சோ்ந்த ராஜேஷ் மகன் பாா்த்தசாரதி (22) என்பது தெரியவந்தது.
ஏற்காடு போலீஸாா், இறந்த செல்லம்மாளின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஏற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...