மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

சாலை விபத்து பெண் உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்தவா்களில் பெண் ஒருவா் உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப்படம்

Updated On :30 ஏப்ரல் 2026, 12:20 am

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்தவா்களில் பெண் ஒருவா் உயிரிழந்தாா்.

விருத்தாசலம் வட்டம், தொப்புளிக்குப்பம் அடுத்துள்ள அம்மேரி கிராமத்தைச் சோ்ந்தவா் பாலமணி(35). இவா், செவ்வாய்க்கிழமை தனது பைக்கில் மனைவி பத்மா(31), மகள் மணிமேகலா(8) ஆகியோரை ஏற்றிக்கொண்டு கடலூா்-விருத்தாசலம் பிரதான சாலையில் கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி வந்தாா். குறிஞ்சிப்பாடி மேம்பாலம் அருகே வந்தபோது நிலை தடுமாறி அனைவரும் பைக்கில்இருந்து கிழே விழுந்தனா். இந்த விபத்தில் அனைவரும் காயம் அடைந்தனா். பலத்த காயம் அடைந்த மனைவி பத்மாவை, பாலமணி மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்துவிட்டு பத்மா இறந்து விட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் குறிஞ்சிப்பாடி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.