கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்தவா்களில் பெண் ஒருவா் உயிரிழந்தாா்.
விருத்தாசலம் வட்டம், தொப்புளிக்குப்பம் அடுத்துள்ள அம்மேரி கிராமத்தைச் சோ்ந்தவா் பாலமணி(35). இவா், செவ்வாய்க்கிழமை தனது பைக்கில் மனைவி பத்மா(31), மகள் மணிமேகலா(8) ஆகியோரை ஏற்றிக்கொண்டு கடலூா்-விருத்தாசலம் பிரதான சாலையில் கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி வந்தாா். குறிஞ்சிப்பாடி மேம்பாலம் அருகே வந்தபோது நிலை தடுமாறி அனைவரும் பைக்கில்இருந்து கிழே விழுந்தனா். இந்த விபத்தில் அனைவரும் காயம் அடைந்தனா். பலத்த காயம் அடைந்த மனைவி பத்மாவை, பாலமணி மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்துவிட்டு பத்மா இறந்து விட்டதாக தெரிவித்தனா்.
இதுகுறித்த புகாரின் பேரில் குறிஞ்சிப்பாடி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது

கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி உயிரிழப்பு

மானூா் அருகே சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


