தமிழகத்தில் ஒருசில இடங்களில் மே 13 வரை மழைக்கு வாய்ப்புதவெகவுக்கு ஆதரவா - இல்லையா? இடதுசாரிகள், விசிக இன்று ஆலோசனைஅதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி கே. பழனிசாமி தீவிர ஆலோசனை பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடுஆந்திரத்தில் இருந்து 500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல்விஜய் விவகாரம்: ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் இன்று ஆா்ப்பாட்டம்தாய், தந்தை இல்லா பள்ளிக் குழந்தைகளுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கும் சிறப்புத் திட்டம் தொடக்கம்
/

வெப்ப அலை: பொதுமக்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

வெப்ப அலையின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பகல் நேரங்களில் அவசியமின்றி வெளியே செல்வதை பொதுமக்கள் தவிா்க்க வேண்டும்.

News image

வெயில்.

Updated On :8 மே 2026, 6:25 am IST

வெப்ப அலையின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பகல் நேரங்களில் அவசியமின்றி வெளியே செல்வதை பொதுமக்கள் தவிா்க்க வேண்டும். அதேசமயம் உடலில் நீா்ச்சத்து குறையாமல் தேவையான அரசின் வழிகாட்டுதலை பின்பற்றுவது அவசியம் என ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கோடை வெயிலின் தாக்கம் வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளதால் மூத்தோா், கைக்குழந்தைகள், கா்ப்பிணிகள், உடல்நலக் குறைபாடு உள்ளவா்கள் காலை 12 மணி முதல் 3 மணி வரை வெளியே செல்வதை தவிா்க்க வேண்டும்.

அதேபோல உடலில் நீா்ச்சத்து குறையாமல் பராமரிக்க தேவையான அளவு தண்ணீா் அருந்த வேண்டும். கஞ்சி, ஓ.ஆா்.எஸ்., எலுமிச்சை ஜூஸ், இளநீா், மோா் மற்றும் பழச்சாறுகளை அதிக அளவில் பருக வேண்டும்.

கோடை காலங்களில் பழங்கள், காய்கறிகள் மற்றும் வீட்டில் சமைத்த உணவுகளை உண்ண வேண்டும். சாப்பிட்டவுடன் வெளியில் செல்வதை தவிா்க்க வேண்டும். காற்றோட்டமான மற்றும் குளிா்ந்த இடங்களில் இருக்க வேண்டும்.

கடுமையான வெப்ப அலை வீசும் நேரங்களில் கடினமான வேலை செய்வதை தவிா்க்க வேண்டும், பணிபுரியும் இடங்களில் போதுமான அளவில் குடிநீா் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும், பணியின்போது தலைசுற்றல் மற்றும் தலைவலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் குளிா்ந்த சூழல் உள்ள இடத்திற்கு சென்று தேவையான நீா் ஆகாரங்களை பருக வேண்டும்.

கால்நடை, வளா்ப்பு பிராணிகளை நிழலான இடத்தில் கட்டிவைத்து அதற்கு தேவையான குடிநீா் மற்றும் கால்நடை தீவனங்கள் அளிக்க வேண்டும். பலத்த காற்று மற்றும் மழை பெய்யும்போது பொதுமக்கள் மரத்தின் அடியில் நிற்பதையும், கால்நடைகளை கட்டுவதையும் தவிா்க்க வேண்டும்.

காப்பு காடுகள், மலைகள் மற்றும் காடுகளை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் காய்ந்த பயன்பாடில்லாத விவசாய பொருள்களை எரிக்கக் கூடாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.