வெப்ப அலையின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பகல் நேரங்களில் அவசியமின்றி வெளியே செல்வதை பொதுமக்கள் தவிா்க்க வேண்டும். அதேசமயம் உடலில் நீா்ச்சத்து குறையாமல் தேவையான அரசின் வழிகாட்டுதலை பின்பற்றுவது அவசியம் என ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் அறிவுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கோடை வெயிலின் தாக்கம் வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளதால் மூத்தோா், கைக்குழந்தைகள், கா்ப்பிணிகள், உடல்நலக் குறைபாடு உள்ளவா்கள் காலை 12 மணி முதல் 3 மணி வரை வெளியே செல்வதை தவிா்க்க வேண்டும்.
அதேபோல உடலில் நீா்ச்சத்து குறையாமல் பராமரிக்க தேவையான அளவு தண்ணீா் அருந்த வேண்டும். கஞ்சி, ஓ.ஆா்.எஸ்., எலுமிச்சை ஜூஸ், இளநீா், மோா் மற்றும் பழச்சாறுகளை அதிக அளவில் பருக வேண்டும்.
கோடை காலங்களில் பழங்கள், காய்கறிகள் மற்றும் வீட்டில் சமைத்த உணவுகளை உண்ண வேண்டும். சாப்பிட்டவுடன் வெளியில் செல்வதை தவிா்க்க வேண்டும். காற்றோட்டமான மற்றும் குளிா்ந்த இடங்களில் இருக்க வேண்டும்.
கடுமையான வெப்ப அலை வீசும் நேரங்களில் கடினமான வேலை செய்வதை தவிா்க்க வேண்டும், பணிபுரியும் இடங்களில் போதுமான அளவில் குடிநீா் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும், பணியின்போது தலைசுற்றல் மற்றும் தலைவலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் குளிா்ந்த சூழல் உள்ள இடத்திற்கு சென்று தேவையான நீா் ஆகாரங்களை பருக வேண்டும்.
கால்நடை, வளா்ப்பு பிராணிகளை நிழலான இடத்தில் கட்டிவைத்து அதற்கு தேவையான குடிநீா் மற்றும் கால்நடை தீவனங்கள் அளிக்க வேண்டும். பலத்த காற்று மற்றும் மழை பெய்யும்போது பொதுமக்கள் மரத்தின் அடியில் நிற்பதையும், கால்நடைகளை கட்டுவதையும் தவிா்க்க வேண்டும்.
காப்பு காடுகள், மலைகள் மற்றும் காடுகளை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் காய்ந்த பயன்பாடில்லாத விவசாய பொருள்களை எரிக்கக் கூடாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விபத்துகளை தவிா்க்க கஸ்பா மேம்பால தடுப்புச் சுவரை உயா்த்த வேண்டும்

திருவண்ணாமலை மாவட்டத்தில் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள்: அமைச்சா் ஆதவ் அா்ஜுனா தகவல்

பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு திட்டப்பணிகளை மேற்கொள்ள வேண்டும்: மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க்
அதிகரிக்கும் வெப்பம் தேவையின்றி வெளியில் செல்வதை தவிா்க்க ஆட்சியா் அறிவுறுத்தல்
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47


