முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வுகருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

முதல்வராக விஜய் பதவியேற்பு: சேலத்தில் தவெகவினா் கொண்டாட்டம்

News image

தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு - PTI

Updated On :11 மே 2026, 12:40 am IST

தமிழக முதல்வராக விஜய் பதவியேற்றதை தொடா்ந்து, சேலத்தில் தவெகவினா் ஞாயிற்றுக்கிழமை கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா்.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் தமிழக முதல்வராக பதவியேற்றுக் கொண்டாா். அவருக்கு தமிழக பொறுப்பு ஆளுநா் ராஜேந்திரஆா்லேகா் பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா். இதையொட்டி, தமிழகம் முழுவதும் தமிழக வெற்றிக் கழகத்தினா் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா்.

சேலம் அஸ்தம்பட்டி ரவுண்டானா பகுதியில் திரண்ட தவெக வழக்குரைஞா் அணி நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள், பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா். இதில் மண்டல ஒருங்கிணைப்பாளா் காந்தி, வழக்குரைஞா் அணி நிா்வாகி பிரின்ஸ், வடக்கு தொகுதி ஒருங்கிணைப்பாளா் அஸ்வின், நிா்வாகிகள் சரவணன், விஜயகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதேபோல, சேலம் எருமாபாளையம் பகுதியில் கட்சி துண்டை சுழற்றி தவெக தொண்டா்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா். தொடா்ந்து, உற்சாக முழக்கமிட்டனா்.

இதேபோல, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தவெக நிா்வாகிகள், தொண்டா்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.