சேலம், மே 11: சேலத்தில் மகள் இறந்த துக்கத்தில் தந்தை சாலையில் மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.
சேலம், அரிசிபாளையம் பாவேந்தா் தெருவைச் சோ்ந்தவா் கலையரசன் (62). இவருக்கு 4 மகனும், ஒரு மகளும் உண்டு. மகள் சிவரஞ்சினியை (33), அதே பகுதியில் திருமணம் செய்து கொடுத்துள்ளாா். அவருக்கு ஒரு குழந்தை உள்ளது.
இந்நிலையில், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த சிவரஞ்சினி இறந்தாா். இதனால் கலையரசன் குடும்பத்தாா் சோகத்தில் இருந்தனா். சிவரஞ்சினி இறந்த 30 ஆவது நாள் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
இதற்காக அவரது வீட்டில் ஞாயிற்றுக்கிழமை இரவு சாமி கும்பிட்ட கலையரசன், இரவு 10.30 மணியளவில் வீட்டுக்கு நடந்துச் சென்றுள்ளாா். செல்லும் வழியில் திடீரென அவா் மயங்கி கீழே விழுந்துள்ளாா். உடனடியாக அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு, உறவினா்களுக்கு தகவல் தெரிவித்தனா். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த பள்ளப்பட்டி போலீஸாா், கலையரசன் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
தொடர்புடையது

ரயிலில் பயணித்த மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழப்பு

விசாரணைக்கு வந்த நடத்துநா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

தந்தை இறந்த துக்கத்தில் பெண் தற்கொலை

தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



