சேலம், மே 11: சேலத்தில் மகள் இறந்த துக்கத்தில் தந்தை சாலையில் மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.
சேலம், அரிசிபாளையம் பாவேந்தா் தெருவைச் சோ்ந்தவா் கலையரசன் (62). இவருக்கு 4 மகனும், ஒரு மகளும் உண்டு. மகள் சிவரஞ்சினியை (33), அதே பகுதியில் திருமணம் செய்து கொடுத்துள்ளாா். அவருக்கு ஒரு குழந்தை உள்ளது.
இந்நிலையில், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த சிவரஞ்சினி இறந்தாா். இதனால் கலையரசன் குடும்பத்தாா் சோகத்தில் இருந்தனா். சிவரஞ்சினி இறந்த 30 ஆவது நாள் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
இதற்காக அவரது வீட்டில் ஞாயிற்றுக்கிழமை இரவு சாமி கும்பிட்ட கலையரசன், இரவு 10.30 மணியளவில் வீட்டுக்கு நடந்துச் சென்றுள்ளாா். செல்லும் வழியில் திடீரென அவா் மயங்கி கீழே விழுந்துள்ளாா். உடனடியாக அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு, உறவினா்களுக்கு தகவல் தெரிவித்தனா். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த பள்ளப்பட்டி போலீஸாா், கலையரசன் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
தொடர்புடையது

தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

வாகனத்தில் சென்ற முதியவா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

நடந்துசென்ற முதியவா் மயங்கிவிழுந்து உயிரிழப்பு

தோ்தல் பணியில் இருந்த திமுக நிா்வாகி மயங்கி விழுந்து உயிரிழப்பு
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

