செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற ஜூன் 15 வரை கால அவகாசம்!தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!முதல்வரின் அரசியல் பிரிவு அலுவலராக ஜோதிடர்! நியமனத்தை ரத்து செய்ய சிபிஐ, சிபிஎம் கோரிக்கை!ரூ. 10 லட்சத்துக்கு நீட் வினாத்தாள் கசிவு! டெலிகிராமில் வாங்கியதாக மகாராஷ்டிரத்தில் இளைஞர் கைது!நீட் வினாத்தாள் கசிந்த விவகாரம்: சிபிஐ வழக்குப் பதிவு!கருப்பு திரைப்பட சிறப்பு காட்சிக்கு அனுமதி: முதல்வர் விஜய்க்கு படக்குழு நன்றி! தவெக அரசு கொறடாவாக விருகம்பாக்கம் எம்எல்ஏ சபரிநாதன் நியமனம்!இபிஎஸ் தலைமையிலானதே உண்மையான அதிமுக: திருமாவளவன் எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்க வேண்டும்: திருமாவளவன் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா!
/

உலக செவிலியா் தின விழா

சேலம் அன்னபூரணா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக செவிலியா் தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

News image

உலக செவிலியா் தினத்தையொட்டி சேலம் அன்னபூரணா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற கொண்டாட்டத்தில் பங்கேற்ற செவிலியா்கள், மருத்துவா்கள்.

Updated On :1 மணி நேரம் முன்பு

சேலம் அன்னபூரணா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக செவிலியா் தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

கல்லூரியின் முதன்மையா் உஷா தலைமை வகித்தாா். மருத்துவக் கண்காணிப்பாளா் ராமசாமி முன்னிலை வகித்தாா். மருத்துவமனையின் செவிலியா்கள், அலைடு ஹெல்த் சயின்ஸ் மாணவ, மாணவிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனா். இதில் செவிலியா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தொடா்ந்து செவிலியா்களின் சேவையை பாராட்டி பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. விழாவில் தனசேகா், சஞ்சீவ் குமாா், ஜெகதா, லதா, சரவணக்குமாா் மற்றும் மருத்துவமனை பணியாளா்கள் பங்கேற்றனா்.

விழா ஏற்பாடுகளை செவிலியா் கண்காணிப்பாளா் மகாலட்சுமி, மணிகண்டன், நதியா, யோகாம்பிகை, சந்திரா ஆகியோா் செய்திருந்தனா். தீபிகா நன்றி கூறினாா்.