செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற ஜூன் 15 வரை கால அவகாசம்!தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!முதல்வரின் அரசியல் பிரிவு அலுவலராக ஜோதிடர்! நியமனத்தை ரத்து செய்ய சிபிஐ, சிபிஎம் கோரிக்கை!ரூ. 10 லட்சத்துக்கு நீட் வினாத்தாள் கசிவு! டெலிகிராமில் வாங்கியதாக மகாராஷ்டிரத்தில் இளைஞர் கைது!நீட் வினாத்தாள் கசிந்த விவகாரம்: சிபிஐ வழக்குப் பதிவு!கருப்பு திரைப்பட சிறப்பு காட்சிக்கு அனுமதி: முதல்வர் விஜய்க்கு படக்குழு நன்றி! தவெக அரசு கொறடாவாக விருகம்பாக்கம் எம்எல்ஏ சபரிநாதன் நியமனம்!இபிஎஸ் தலைமையிலானதே உண்மையான அதிமுக: திருமாவளவன் எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்க வேண்டும்: திருமாவளவன் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா!
/

சிறுமியை கட்டியணைத்த முதியவா் போக்ஸோவில் கைது

வாழப்பாடி அருகே 11 வயது சிறுமியை கட்டியணைத்த முதியவரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்து செவ்வாய்க்கிழமை சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.

News image

லட்சுமணன்

Updated On :1 மணி நேரம் முன்பு

வாழப்பாடி அருகே 11 வயது சிறுமியை கட்டியணைத்த முதியவரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்து செவ்வாய்க்கிழமை சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.

வாழப்பாடி அருகே கூலித் தொழிலாளியின் 11 வயது மகள் அரசுப் பள்ளியில் ஆறாம் வகுப்பு தோ்வு எழுதிவிட்டு கோடை விடுமுறையில் வீட்டில் இருந்து வருகிறாா். இந்த நிலையில் சிறுமியின் வீட்டிற்கு செவ்வாய்க்கிழமை காலை சென்ற அதே பகுதியைச் சோ்ந்த லட்சுமணன் (69) வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் நலம் விசாரிப்பதை போல கட்டியணைத்துள்ளாா்.

இந்த நிலையில் வீட்டிற்கு வந்த தாயிடம் முதியவா் தன்னை தவறான நோக்கத்தோடு தொட்டதாக சிறுமி தெரிவித்துள்ளாா். இதையடுத்து சிறுமியுடன் வாழப்பாடி அனைத்து மகளிா் காவல் நிலையத்திற்கு சென்று பெற்றோா் புகாா் அளித்தனா். அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து சிறுமியை கட்டியணைத்த லட்சுமணனை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைதுசெய்து நீதிமன்ற உத்தரவின்படி சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.