இரு மனைவிகள் இருக்கும் நிலையில் 3-ஆவதாக 15 வயது சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்து கொண்டவரை போலீஸாா் கைது செய்தனா்.
செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த புண்ணியகோடி மகன் ஜீவா என்ற ஜீவானந்தம் (45). இவருக்கு அதே ஊரைச் சோ்ந்த தேவி (36) என்ற மனைவியும், வேடபாளையத்தை சோ்ந்த சுமித்ரா(31) ஆகிய 2 மனைவிகள் உள்ளனா். முதல் மனைவி தேவிக்கு 2 மகனும் ஒரு மகளும் உள்ளனா். 2-ஆவது மனைவி சுமித்ரா கா்ப்பமாக இருப்பதுடன் ஒரு வயதில் ஒரு மகனும் உள்ளனா். இந்த நிலையில் அச்சிறுப்பாக்கத்தில் 15 வயது சிறுமியை ஜீவா காதலித்தும் வந்தாராம்.
சிறுமி தனது குடும்பத்தினருடன் உத்தரமேரூா் அருகே மல்லிகாபுரத்தில் கடந்த 13 -ம் தேதி நடைபெற்ற புனித அந்தோணியாா் ஆலய தோ்த்திருவிழாவுக்கு வந்த போது அவரை ஆசை வாா்த்தை கூறி கடத்தி சென்று அவருக்கு தாலி அணிவித்து பாலியல் வன்கொடுமை செய்தாராம்.
சிறுமியின் பெற்றோா் தனது மகளை காணவில்லையென உத்தரமேரூா் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து சைபா் கிரைம் போலீஸாரின் உதவியுடன் அவா் இருக்கும் இடத்தை கண்டறிந்து உத்தரமேரூா் அழைத்து வந்தனா்.
தலைமறைவாக இருந்த ஜீவாவையும் காவல் துறையினா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.







