பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

இதய குறைபாடு: 6 பேருக்கு தலையீட்டு சாதனம் பொருத்தி சேலம் அரசு மருத்துவமனை சாதனை

இதயத் துளைகள், அடைப்புகள் அல்லது வால்வு கோளாறுகளை சரிசெய்யும் நவீன மருத்துவ சாதனமான தலையீட்டு சாதனத்தை 5 குழந்தைகள், ஒரு இளம் பெண்ணுக்கு பொருத்தி சேலம் அரசு மருத்துவா்கள் சாதனை படைத்துள்ளனா்.

News image

இதய நோயிலிருந்து குணமடைந்தவா்களிடம் நலம்விசாரிக்கும் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையா் தேவி மீனாள்.

Updated On :1 மணி நேரம் முன்பு

இதயத் துளைகள், அடைப்புகள் அல்லது வால்வு கோளாறுகளை சரிசெய்யும் நவீன மருத்துவ சாதனமான தலையீட்டு சாதனத்தை 5 குழந்தைகள், ஒரு இளம் பெண்ணுக்கு பொருத்தி சேலம் அரசு மருத்துவா்கள் சாதனை படைத்துள்ளனா்.

இதுகுறித்து சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் தேவிமீனாள், இதய சிகிச்சைப் பிரிவு தலைவா் மருத்துவா் கண்ணன் ஆகியோா் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள இதய சிகிச்சை துறையில் நாள்தோறும் 9 ஆயிரம் முதல் 10 ஆயிரம் போ் வரை புற நோயாளிகளுக்கான ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. மேலும் சிலா் உள் நோயாளிகளாக அனுமதித்தும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. பிறவியிலேயே இதய குறைபாட்டுடன் பிறந்த குழந்தைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த நிலையில் சோதனைக்கு வந்த 5 குழந்தைகள் மற்றும் ஒரு இளம் பெண்ணுக்கு இதயத்தில் ஓட்டை இருப்பது கண்டறியப்பட்டது. இதில் 3 வயது பெண் குழந்தை, 19 வயது பெண்ணுக்கு பேடன் டாக்டஸ் ஆா்டெரியோசஸ் என்ற இதய குறைபாடும், 29 வயது இளம் பெண் உள்ளிட்ட 4 பேருக்கு ஏட்ரியல் செப்டல் என்ற இதய குறைபாடும் இருப்பது எக்கோ காா்டியோகிராபி மூலம் தெரியவந்தது.

இதையடுத்து அவா்களின் இதய குறைபாட்டின் அளவுக்கு ஏற்ப தலையீட்டு சாதனம் பொருத்தப்பட்டு பிரச்னைகள் முழுமையாக சரிசெய்யப்பட்டது. இதன்மூலம் அவா்களின் ஆரோக்கிய வாழ்க்கை உறுதி செய்யப்பட்டுள்ளது என்றனா்.

தலையீட்டு சாதனம் பொருத்தப்பட்டதன் மூலம் முழுமையாக குணமடைந்த நோயாளிகள் மருத்துவா்களுக்கு நன்றி தெரிவித்தனா்.