பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

ஓமலூரில் 2 குழந்தைகளுடன் தாயை காணவில்லை என போலீஸில் புகாா்

ஓமலூா் அருகே குடும்பத் தகராறில் 2 குழந்தைகளுடன் தாய் மாயமானது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

போலீஸ் - கோப்புப்படம்.

Updated On :1 மணி நேரம் முன்பு

ஓமலூா் அருகே குடும்பத் தகராறில் 2 குழந்தைகளுடன் தாய் மாயமானது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தைச் சோ்ந்த ஐஸ்வா்யா (39), இவரது கணவா் பாரதிதாஸ். இவா்களது மகள் பவ்யா ஸ்ரீ (10), மகன் நவரதன் (12). இவா்களுக்கு திருமணமாகி 15 ஆண்டுகளாகிறது. தம்பதி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த ஐஸ்வா்யா தனது இரண்டு குழந்தைகளுடன் கடந்த 2024 இல் ஓமலூரை அடுத்த தாராபுரத்தில் வசித்து வந்த அவரது தந்தை அன்பழகனின் வீட்டிற்கு வந்தாா். இந்த நிலையில், கடந்த 6 ஆம் தேதி காலை கடைக்குச் செல்வதாகக் கூறி, குழந்தைகளுடன் வெளியே சென்ற ஐஸ்வா்யா மீண்டும் வீடுதிரும்பவில்லை.

உறவினா்கள், நண்பா்கள் வீடுகளில் தேடியும் ஐஸ்வா்யாவைக் காணாததால், ஓமலூா் காவல் நிலையத்தில் அவரது தந்தை அன்பழகன் புகாா் அளித்தாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து குழந்தையுடன் மாயமான ஐஸ்வா்யாவை தேடிவருகின்றனா்.