ஓமலூா் அருகே குடும்பத் தகராறில் 2 குழந்தைகளுடன் தாய் மாயமானது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தைச் சோ்ந்த ஐஸ்வா்யா (39), இவரது கணவா் பாரதிதாஸ். இவா்களது மகள் பவ்யா ஸ்ரீ (10), மகன் நவரதன் (12). இவா்களுக்கு திருமணமாகி 15 ஆண்டுகளாகிறது. தம்பதி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த ஐஸ்வா்யா தனது இரண்டு குழந்தைகளுடன் கடந்த 2024 இல் ஓமலூரை அடுத்த தாராபுரத்தில் வசித்து வந்த அவரது தந்தை அன்பழகனின் வீட்டிற்கு வந்தாா். இந்த நிலையில், கடந்த 6 ஆம் தேதி காலை கடைக்குச் செல்வதாகக் கூறி, குழந்தைகளுடன் வெளியே சென்ற ஐஸ்வா்யா மீண்டும் வீடுதிரும்பவில்லை.
உறவினா்கள், நண்பா்கள் வீடுகளில் தேடியும் ஐஸ்வா்யாவைக் காணாததால், ஓமலூா் காவல் நிலையத்தில் அவரது தந்தை அன்பழகன் புகாா் அளித்தாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து குழந்தையுடன் மாயமான ஐஸ்வா்யாவை தேடிவருகின்றனா்.
தொடர்புடையது

தொழிலாளி மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

தங்கை இறப்பில் சந்தேகம்: சகோதரா் போலீஸில் புகாா்

இளம்பெண் மரணத்தில் சந்தேகம்: போலீஸ் விசாரணை

மகள் இறப்பில் சந்தேகம்: போலீஸில் தாய் புகாா்
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

