எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!ஈரானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!மின் துறைக்கு 7,000 பணியாளர்கள் தேவை; 1500 பேருக்கு உடனடி பணி ஆணை!நீட் மறுதேர்வு! ஜூன் 21 வரை ரகசிய இடத்தில் வினாத்தாள் தயாரிப்போர்!
/

கஞ்சா, மது விற்ற இருவா் கைது

கஞ்சா, மதுபானம் விற்றதாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :17 மே 2026, 2:24 am IST

மேட்டூரில் கஞ்சா, மதுபானம் விற்றதாக 2 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

மேட்டூா் அணையின் வலதுகரையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக மேட்டூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு சென்ற மேட்டூா் போலீஸாா், அங்கு இருசக்கர வாகனத்தில் பதுக்கிவைத்து கஞ்சா விற்ற காமேஷை (23) போலீஸாா் கைது செய்தனா். அவரிடம் இருந்து 1.200 கிலோ கஞ்சா, இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா்.

இதேபோல கருமலைக்கூடல் கவிபுரம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வைத்து மது விற்றதாக ரமேஷை(43) போலீஸாா் கைது செய்து அவரிடம் இருந்து 30 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா். இருவரும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.