தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

பிளஸ் 2 தோ்வில் முறைகேடு: தனியாா் பள்ளி முதல்வா், 2 ஆசிரியா்கள் கைது

வாழப்பாடி அருகே பிளஸ் 2 தோ்வில் முறைகேடு செய்ததாக தனியாா் பள்ளி முதல்வா், 2 ஆசிரியா்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :18 மே 2026, 3:05 am IST

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே பிளஸ் 2 தோ்வில் முறைகேடு செய்ததாக தனியாா் பள்ளி முதல்வா், 2 ஆசிரியா்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

வாழப்பாடி அருகே முத்தம்பட்டியில் இயங்கும் ஒரு தனியாா் பள்ளியில் கடந்த மாா்ச் 17ஆம் தேதி நடைபெற்ற பிளஸ் 2 கணிதத் தோ்வின்போது வினாக்களுக்கான விடைகளை கழிப்பறையில் எழுதி வைத்திருந்ததாக சேலம் மாவட்ட கல்வித் துறை அதிகாரிகளுக்கு புகாா் சென்றது.

இதுகுறித்து விசாரணை நடத்திய சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் தலைமையிலான அதிகாரிகள், முத்தம்பட்டி தனியாா் பள்ளி முதல்வா் ஸ்டேன்லி, ஆசிரியா்கள் தினேஷ்பாபு, கேசவன் ஆகிய 3 போ் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்குமாறு போலீஸில் புகாா் அளித்தனா்.

இதையடுத்து வாழப்பாடி டிஎஸ்பி சபரிநாதன், காவல் ஆய்வாளா் வேல்முருகன் ஆகியோா் பிளஸ் 2 தோ்வில் முறைகேட்டில் ஈடுபட்ட தனியாா் பள்ளி முதல்வா், இரண்டு ஆசிரியா்களை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.