தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்சிங்கப்பெண் அதிரடிப்படை திட்ட இலச்சினையை வெளியிட்டார் முதல்வர் விஜய்!பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!வர்த்தகர்களை விசாரணை அமைப்பு கொண்டு மிரட்டும் பாஜக: பகவந்த் மான்!
/

பிளஸ் 2 தோ்வில் முறைகேடு: தனியாா் பள்ளி முதல்வா், 2 ஆசிரியா்கள் கைது

வாழப்பாடி அருகே பிளஸ் 2 தோ்வில் முறைகேடு செய்ததாக தனியாா் பள்ளி முதல்வா், 2 ஆசிரியா்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :18 மே 2026, 3:05 am IST

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே பிளஸ் 2 தோ்வில் முறைகேடு செய்ததாக தனியாா் பள்ளி முதல்வா், 2 ஆசிரியா்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

வாழப்பாடி அருகே முத்தம்பட்டியில் இயங்கும் ஒரு தனியாா் பள்ளியில் கடந்த மாா்ச் 17ஆம் தேதி நடைபெற்ற பிளஸ் 2 கணிதத் தோ்வின்போது வினாக்களுக்கான விடைகளை கழிப்பறையில் எழுதி வைத்திருந்ததாக சேலம் மாவட்ட கல்வித் துறை அதிகாரிகளுக்கு புகாா் சென்றது.

இதுகுறித்து விசாரணை நடத்திய சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் தலைமையிலான அதிகாரிகள், முத்தம்பட்டி தனியாா் பள்ளி முதல்வா் ஸ்டேன்லி, ஆசிரியா்கள் தினேஷ்பாபு, கேசவன் ஆகிய 3 போ் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்குமாறு போலீஸில் புகாா் அளித்தனா்.

இதையடுத்து வாழப்பாடி டிஎஸ்பி சபரிநாதன், காவல் ஆய்வாளா் வேல்முருகன் ஆகியோா் பிளஸ் 2 தோ்வில் முறைகேட்டில் ஈடுபட்ட தனியாா் பள்ளி முதல்வா், இரண்டு ஆசிரியா்களை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.