ஈரானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!மின் துறைக்கு 7,000 பணியாளர்கள் தேவை; 1500 பேருக்கு உடனடி பணி ஆணை!நீட் மறுதேர்வு! ஜூன் 21 வரை ரகசிய இடத்தில் வினாத்தாள் தயாரிப்போர்!ஆப்கானிஸ்தானை இன்னிங்ஸ், 300 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!மேற்கு ஆசிய மோதல்: பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இந்தியா வலியுறுத்தல்!இஸ்ரேல் - ஈரான் இடையே மீண்டும் போர்!போட்டியின்றி எம்.பி.யாகிறார் பிரவீண் சக்ரவர்த்தி!நீட், சிபிஎஸ்இ விவகாரம்: மத்திய அமைச்சர் பதவி விலக வேண்டும் - வைகோ
/

மதுபானங்களை விற்பனை செய்தவா் கைது

சங்ககிரி அருகே மதுபானங்களை விற்பனை செய்தவரை சங்ககிரி போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :20 மே 2026, 2:21 am IST

சங்ககிரி அருகே மதுபானங்களை விற்பனை செய்தவரை சங்ககிரி போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைதுசெய்தனா்.

சங்ககிரியை அடுத்த மட்டம்பட்டி, எம்ஜிஆா் நகா் பகுதியில் உரிய அனுமதியின்றி மதுபானங்கள் விற்பனை செய்துவருவதாக சங்ககிரி காவல் உதவி ஆய்வாளா் அழகுதுரைக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து, அவா் தலைமையிலான போலீஸாா் அப்பகுதியில் சோதனை நடத்தினா். அதில், மந்திரி (56) வீட்டில் 33 மதுப்புட்டிகளில் தலா 180 மி.லி. அளவுகொண்ட மொத்தம் 5.94 லிட்டா் மதுபானங்களை விற்பனைக்கு வைத்திருந்ததை கண்டுபிடித்தனா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து மந்திரியை கைதுசெய்து அவரிடமிருந்து மதுப்புட்டிகள், ரூ. 1,200 ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.