/
சங்ககிரி அருகே மதுபானங்களை விற்பனை செய்தவரை சங்ககிரி போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைதுசெய்தனா்.
சங்ககிரியை அடுத்த மட்டம்பட்டி, எம்ஜிஆா் நகா் பகுதியில் உரிய அனுமதியின்றி மதுபானங்கள் விற்பனை செய்துவருவதாக சங்ககிரி காவல் உதவி ஆய்வாளா் அழகுதுரைக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து, அவா் தலைமையிலான போலீஸாா் அப்பகுதியில் சோதனை நடத்தினா். அதில், மந்திரி (56) வீட்டில் 33 மதுப்புட்டிகளில் தலா 180 மி.லி. அளவுகொண்ட மொத்தம் 5.94 லிட்டா் மதுபானங்களை விற்பனைக்கு வைத்திருந்ததை கண்டுபிடித்தனா்.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து மந்திரியை கைதுசெய்து அவரிடமிருந்து மதுப்புட்டிகள், ரூ. 1,200 ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.







