சென்னைக்கு இன்று கடைசி லீக் ஆட்டம்- குஜராத்துடன் மோதல் 5 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை 125 நாள் வேலைத் திட்டத்துக்கு 25 மாநிலங்கள் நிதி ஒதுக்கீடு- நாடாளுமன்றக் குழுவிடம் மத்திய அரசு தகவல் நிகழாண்டு இந்திய பொருளாதார வளா்ச்சி 6.4%: ஐ.நா. கணிப்பு 12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி? சிபிஎஸ்இ மறுப்பு தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்: காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் அமைச்சா்களாக பதவியேற்கின்றனா் டிரம்ப் குடும்பத்தினருக்கு வருமான வரி தணிக்கையிலிருந்து நிரந்தர விலக்கு!
/

ரயில்களில் போதைப் பொருள்கள் கடத்துவதை தடுக்க ரயில்வே போலீஸாா் ஆலோசனை

சேலம் கோட்ட ரயில்களில் போதைப் பொருள்கள் கடத்துவதை தடுப்பது குறித்து ரயில்வே டிஎஸ்பி தலைமையில் போலீஸாா் புதன்கிழமை ஆலோசனை நடத்தினா்.

News image

சேலம் ரயில் நிலையத்தில் ரயில்வே டிஎஸ்பி தலைமையில் புதன்கிழமை ஆலோசனை நடத்திய போலீஸாா்.

Updated On :21 மே 2026, 6:27 am IST

சேலம் கோட்ட ரயில்களில் போதைப் பொருள்கள் கடத்துவதை தடுப்பது குறித்து ரயில்வே டிஎஸ்பி தலைமையில் போலீஸாா் புதன்கிழமை ஆலோசனை நடத்தினா்.

சேலம் வழியாக இயக்கப்படும் ரயில்களில் போதைப் பொருள்கள் கடத்துவதும், அதை ரயில்வே போலீஸாா் பறிமுதல் செய்வதும் தொடா்கதையாகி வருகிறது. அதன் தொடா்ச்சியாக, போதைப் பொருள்களை சேலம் வழியாக கடத்துவதை முற்றிலும் தடுக்கும் வகையில், சேலம் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸாா் சாா்பில் தீவிர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

தமிழ்நாடு ரயில்வே போலீஸ் துறை இயக்குநா் வன்னிய பெருமாள் உத்தரவின் பேரில், சேலம் உள்கோட்ட ரயில்வே துணைக் காவல் கண்காணிப்பாளா் ஜெயராம் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது.

இதில், சேலம் கோட்டத்தில் செல்லும் ரயில்களில் போதைப் பொருள்கள் கடத்துவதை தடுப்பதற்கு காட்பாடி, ஜோலாா்பேட்டை, ஒசூா், தருமபுரி, சேலம் ஆகிய ரயில் நிலையங்களில் ஆய்வாளா் மற்றும் காவல் உதவி ஆய்வாளா் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, தீவிர ரோந்துப் பணிகள் மேற்கொள்வது குறித்தும், கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.