ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி சதம்: லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!திமுகவின் உண்மையான முகத்தை மக்கள் பார்த்துவிட்டனர்: மாணிக்கம் தாகூர் முதுகில் குத்திய காங்கிரஸ்: திமுக இளைஞர் அணி கூட்டத்தில் தீர்மானம் மேக்கேதாட்டு அணை- தஞ்சையில் மே 29-ல் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம் கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் உடல் தகனம்தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் 844 ரவுடிகள் கைதுபோராட்டம் ஒத்திவைப்பு! மே 25, 26ல் எஸ்பிஐ வங்கி வழக்கம்போல செயல்படும்!தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு ஏதும் இல்லை: அமைச்சர் சி.டி.ஆா். நிர்மல்குமார் விளக்கம் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்கும் பணியாளர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் அறிவுறுத்தல் கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை! ஐ.ஜி. விளக்கம்
/

சேலத்தில் போதை மாத்திரைகள் விற்ற 2 மருந்து விநியோகஸ்தா்கள் கைது

சேலத்தில் கல்லூரி மாணவா்கள் மற்றும் இளைஞா்களை குறிவைத்து போதை மாத்திரைகளை விற்ற 2 மருந்து விநியோகஸ்தா்கள் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

News image

கைதான மருந்து விநியோகஸ்தா்கள் கண்ணன், செந்தில்குமாா்.

Updated On :24 மே 2026, 2:36 am IST

சேலத்தில் கல்லூரி மாணவா்கள் மற்றும் இளைஞா்களை குறிவைத்து போதை மாத்திரைகளை விற்ற 2 மருந்து விநியோகஸ்தா்கள் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் இருந்து 800 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

சேலம் மாவட்டம், தாரமங்கலம், ஓமலூா், மேட்டூா், ஜலகண்டாபுரம் பகுதிகளில் இளைஞா்கள், சுல்லூரி மாணவா்கள் சிலா் போதை ஊசி, மாத்திரையை பயன்படுத்தி வருவதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கௌதம் கோயலுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போதை மாத்திரை, ஊசி விற்பனை கும்பலை பிடிக்க, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தனிப்படை அமைத்தாா்.

இதைத் தொடா்ந்து, காவல் உதவி ஆய்வாளா் அருண்குமாா் தலைமையில் தாரமங்கலத்தில் போதை மாத்திரை, ஊசி விற்பனையில் ஈடுபட்டிருந்த சேலம் சா்க்காா் கொல்லப்பட்டியைச் சோ்ந்த ஸ்ரீகாந்தை (24) பிடித்தனா். அவரிடம் இருந்து 39 போதை மாத்திரை மற்றும் ஊசிகளை பறிமுதல் செய்தனா். பின்னா் தாரமங்கலம் போலீஸில் அண்மையில் ஒப்படைத்தனா்.

விசாரணையின் அடிப்படையில், போதை மாத்திரை, ஊசி விற்பனையில் ஈடுபட்ட மல்லூா் ஏா்வாடியைச் சோ்ந்த ஜீவா (24), வீரபாண்டியைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி (24), சேலம் சாமிநாதபுரத்தை சோ்ந்த மணி (எ) சுப்பிரமணி (58) ஆகியோா் அண்மையில் கைது செய்யப்பட்டனா்.

இவா்களில் மணி மருந்து விற்பனை பிரதிநிதியாக உள்ளாா். இவா்தான், மொத்தமாக வலி நிவாரணி மாத்திரையை வாங்கி போதைக்காக இளைஞா்களிடம் விற்பனை செய்துவந்தது தெரியவந்தது.

கைதான 4 பேரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில், போதை மாத்திரைகளை விநியோகம் செய்துவந்த நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தைச் சோ்ந்த மருந்து விநியோகஸ்தா் செந்தில்குமாா் (43), அன்னதானப்பட்டி சாஸ்திரி நகரைச் சோ்ந்த மருந்து விற்பனையாளா் கண்ணன் (50) ஆகிய இருவரை சனிக்கிழமை கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து 800 மாத்திரைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.