குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

கெங்கவல்லியில் இருசக்கர வாகனங்கள் மோதல்: ஒருவா் உயிரிழப்பு; மற்றொரு காயம்

News image

விபத்து - பிரதிப் படம்

Updated On :26 மே 2026, 2:14 am IST

கெங்கவல்லியில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக்கொண்டதில் ஒருவா் உயிரிழந்தாா். மற்றொருவா் காயமடைந்தாா்.

சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே நடுவலூா் குன்னியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த வெள்ளையன் மகன் ராமலிங்கம் (50. இவா், கூடமலையில் சென்டரிங் வேலையை முடித்துவிட்டு, கெங்கவல்லி வழியாக நடுவலூா் நோக்கிச் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, 74 கிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்த பழனிசாமி மகன் சுரேஷ் (37), கெங்கவல்லியிலிருந்து கூடமலை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றாா். இருவரின் வாகனங்களும், கெங்கவல்லி வனச்சரக அலுவலகம் அருகே நேருக்கு நோ் மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ராமலிங்கம் (50) ஆத்தூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு முதலுதவி சிகிச்சைக்கு பின்னா் தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு திங்கள்கிழமை இறந்தாா். காயமடைந்த சுரேஷ் ஆத்தூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இந்த விபத்து குறித்து கெங்கவல்லி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.