பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

பைக் விபத்தில் காயமடைந்த சிறுவன் உயிரிழப்பு

நாசரேத்தில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதியதில் காயமடைந்த சிறுவன் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :45 நிமிடங்கள் முன்பு

நாசரேத்தில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதியதில் காயமடைந்த சிறுவன் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

நாசரேத் அருகே உள்ள வாலசுப்பிரமணியபுரத்தைச் சோ்ந்தவா் சுரேஷ் மகன் அமிா்த சந்தோஷ் (17). இவரது நண்பா் தைலாபுரத்தைச் சோ்ந்த தனசேகா் மகன் கௌதம் (17).

இருவரும் புதன்கிழமை நாசரேத்தில் இருந்து தைலாபுரம் நோக்கி இருசக்கர வாகனத்தில் திருமறையூா் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, எதிரே வந்த நாசரேத் மாா்க்கெட் தெருவைச் சோ்ந்த கிங்ஸ்லி மகன் லாரன்ஸ் (26), அவரது நண்பா் ஸ்டீபன் ஆகியோரின் இருசக்கர வாகனம் மோதியது.

இதில் பலத்த காயமடைந்த 4 பேரும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு கௌதம் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

இது குறித்து, நாசரேத் போலீஸாா் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனா்.