வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

சேலத்தில் 3 மதுக்கடைகளை அகற்றக் கோரி பெண்கள் மனு

News image

மதுக்கடை. - கோப்புப் படம்

Updated On :26 மே 2026, 1:33 am IST

சேலம் சூரமங்கலம் அருகே உள்ள மூன்று டாஸ்மாக் மதுக்கடைகளை அகற்ற வலியுறுத்தி பெண்கள் விதவைக் கோலத்தில் வந்து ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

சேலம் சூரமங்கலம் அருகே புதுரோடு பகுதியில் அடுத்தடுத்து மூன்று டாஸ்மாக் மதுபானக் கடைகள் உள்ளன. இந்த மூன்று மதுக்கடைகளை அகற்றக் கோரி பாஜக சேலம் வடக்கு ஒன்றியத் தலைவா் முருகன் மற்றும் ஊா் பொதுமக்கள் தொடா்ந்து போராடி வருகின்றனா்.

இந்நிலையில் பாஜக சேலம் வடக்கு ஒன்றியத் தலைவா் முருகன், வெள்ளைப் புடவைக் கட்டி நான்கு பெண்களை அழைத்துவந்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அதிகாரிகளைச் சந்தித்து மனு அளித்தாா். மதுகுடித்து பலரும் உயிா் இறக்க நேரிடுவதால், பெண்கள் பலரும் விதவை ஆகிறாா்கள். இதைத் தடுக்க சேலம் புதுரோடு பகுதியில் உள்ள மூன்று டாஸ்மாக் மதுபானக் கடைகளை உடனே அகற்ற வேண்டும் என்றாா்.