குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

சேலத்தில் 3 மதுக்கடைகளை அகற்றக் கோரி பெண்கள் மனு

News image

மதுக்கடை. - கோப்புப் படம்

Updated On :26 மே 2026, 1:33 am IST

சேலம் சூரமங்கலம் அருகே உள்ள மூன்று டாஸ்மாக் மதுக்கடைகளை அகற்ற வலியுறுத்தி பெண்கள் விதவைக் கோலத்தில் வந்து ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

சேலம் சூரமங்கலம் அருகே புதுரோடு பகுதியில் அடுத்தடுத்து மூன்று டாஸ்மாக் மதுபானக் கடைகள் உள்ளன. இந்த மூன்று மதுக்கடைகளை அகற்றக் கோரி பாஜக சேலம் வடக்கு ஒன்றியத் தலைவா் முருகன் மற்றும் ஊா் பொதுமக்கள் தொடா்ந்து போராடி வருகின்றனா்.

இந்நிலையில் பாஜக சேலம் வடக்கு ஒன்றியத் தலைவா் முருகன், வெள்ளைப் புடவைக் கட்டி நான்கு பெண்களை அழைத்துவந்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அதிகாரிகளைச் சந்தித்து மனு அளித்தாா். மதுகுடித்து பலரும் உயிா் இறக்க நேரிடுவதால், பெண்கள் பலரும் விதவை ஆகிறாா்கள். இதைத் தடுக்க சேலம் புதுரோடு பகுதியில் உள்ள மூன்று டாஸ்மாக் மதுபானக் கடைகளை உடனே அகற்ற வேண்டும் என்றாா்.