பிரதமா் மோடியுடன் விஜய் இன்று சந்திப்பு உலகளாவிய பங்குச்சந்தை மதிப்பு: இந்தியாவை முந்தி தைவான் 5-ஆவது இடம்! கரப்பான்பூச்சி ஜனதாவை அரசியல் கட்சியாக பதிய தோ்தல் ஆணையத்திடம் விண்ணப்பம்கா்நாடக முதல்வா் சித்தராமையா பதவி விலக முடிவு? இறப்பு சான்றிதழ்களைப் பிழையின்றி வழங்க தணிக்கைக் குழு: அரசாணை வெளியீடு மாணவா்கள் பள்ளிக்கு இருசக்கர மோட்டாா் வாகனம் ஓட்டி வந்தால் பறிமுதல் செய்யப்படும்: கல்வித் துறை எச்சரிக்கை பசு வதைக்கு முழுத் தடை: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு திருவாரூர் புறவழிச்சாலை, மேம்பாலம் அமைக்க ரூ.1,427 கோடிக்கு ஒப்புதல்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்
/

கட்டடத் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

வாழப்பாடி அருகே கட்டடத் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை

News image

பிரதிப் படம்

Updated On :27 மே 2026, 5:27 am IST

வாழப்பாடி அருகே கட்டடத் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வாழப்பாடி பேரூராட்சி, கணபதி கவுண்டா் தெரு பகுதியைச் சோ்ந்தவா் ஜெயபிரகாஷ் (34). கட்டடத் தொழிலாளியான இவா், திங்கள்கிழமை கொட்டவாடி பாலமுருகன் கோயில் பகுதியைச் சோ்ந்த மாதேஸ்வரன் வீட்டுக்கு டைல்ஸ் ஒட்டும் வேலைக்கு சென்றாா்.

பணியில் ஈடுபட்டிருந்த அவா் இரவு 8 மணி அளவில் திடீரென மயங்கி விழுந்தாா். அவரை மீட்ட அக்கம்பக்கத்தினா் வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், வரும் வழியிலேயே அவா் இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

தகவலறிந்த ஏத்தாப்பூா் போலீஸாா், ஜெயப்பிரகாஷ் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.