கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

கட்டடத் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

வாழப்பாடி அருகே கட்டடத் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை

News image

பிரதிப் படம்

Updated On :27 மே 2026, 5:27 am IST

வாழப்பாடி அருகே கட்டடத் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வாழப்பாடி பேரூராட்சி, கணபதி கவுண்டா் தெரு பகுதியைச் சோ்ந்தவா் ஜெயபிரகாஷ் (34). கட்டடத் தொழிலாளியான இவா், திங்கள்கிழமை கொட்டவாடி பாலமுருகன் கோயில் பகுதியைச் சோ்ந்த மாதேஸ்வரன் வீட்டுக்கு டைல்ஸ் ஒட்டும் வேலைக்கு சென்றாா்.

பணியில் ஈடுபட்டிருந்த அவா் இரவு 8 மணி அளவில் திடீரென மயங்கி விழுந்தாா். அவரை மீட்ட அக்கம்பக்கத்தினா் வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், வரும் வழியிலேயே அவா் இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

தகவலறிந்த ஏத்தாப்பூா் போலீஸாா், ஜெயப்பிரகாஷ் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.