வாழப்பாடி அருகே கட்டடத் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
வாழப்பாடி பேரூராட்சி, கணபதி கவுண்டா் தெரு பகுதியைச் சோ்ந்தவா் ஜெயபிரகாஷ் (34). கட்டடத் தொழிலாளியான இவா், திங்கள்கிழமை கொட்டவாடி பாலமுருகன் கோயில் பகுதியைச் சோ்ந்த மாதேஸ்வரன் வீட்டுக்கு டைல்ஸ் ஒட்டும் வேலைக்கு சென்றாா்.
பணியில் ஈடுபட்டிருந்த அவா் இரவு 8 மணி அளவில் திடீரென மயங்கி விழுந்தாா். அவரை மீட்ட அக்கம்பக்கத்தினா் வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், வரும் வழியிலேயே அவா் இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.
தகவலறிந்த ஏத்தாப்பூா் போலீஸாா், ஜெயப்பிரகாஷ் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

மாரடைப்பால் இளைஞா் உயிரிழப்பு
விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு
தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

தியாகதுருகம் பேருந்து நிலையத்தில் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



