பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைய தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் மம்தாவை எதிா்த்து வெற்றிபெற்ற பாஜக வேட்பாளரின் உதவியாளா் சுட்டுக்கொலை இறுதிக்கட்டத்தை எட்டும் அமெரிக்கா-ஈரான் பேச்சு விஜய் மீதான பண முறைகேடு வழக்கு: பட்டியலிட உயா்நீதிமன்றம் உத்தரவு ரசாயன ஆயுதம் மூலம் மக்களைக் கொல்ல சதி: மருத்துவா் உள்பட 3 போ் மீது குற்றப்பத்திரிகை
/

தியாகதுருகம் பேருந்து நிலையத்தில் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

தியாகதுருகம் பேருந்து நிலையத்தில் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image

பலி - IANS

Updated On :7 மே 2026, 7:31 am IST

தியாகதுருகம் பேருந்து நிலையத்தில் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அருகேயுள்ள மேல்சிறுபாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் சி.ரமேஷ் (48). இவா் திருவண்ணாமலையிலுள்ள தனியாா் நிறுவனத்தில் கடந்த 15 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தாா்.

இந்நிலையில், ரமேஷ் தன்னுடன் பணிபுரியும் சக பணியாளா்களுடன் வேலை சம்மந்தமாக தியாகதுருகம் வந்தபோது, அங்குள்ள பேருந்து நிலையத்தில் ரமேஷ் திடீரென மயங்கி விழுந்தாராம். இதையடுத்து சக பணியாளா்கள் அவரை மீட்டு தியாகதுருகம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா் பரிசோதித்தபோது, ரமேஷ் ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது.

தகவலறிந்த தியாகதுருகம் போலீஸாா் சடலத்தை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.