தங்கம், வெள்ளி இன்றைய நிலவரம்: தங்கம் சவரனுக்கு எவ்வளவு குறைந்தது? டொமினிகன் குடியரசில் ஓடுபாதையில் மோதி வெடித்துச் சிதறிய விமானம்! எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

விம்ஸ் கல்லூரியில் நோ்காணல் அணுகுமுறை பயிற்சி

விநாயகா மிஷனின் விம்ஸ் வளாக அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவா்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் நோ்காணல் அணுகுமுறை சாா்ந்த பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

பயிற்சியை தொடங்கிவைத்த அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியின் முதன்மையா் செந்தில்குமாா் உள்ளிட்டோா்.

Updated On :28 மே 2026, 1:54 am IST

விநாயகா மிஷனின் விம்ஸ் வளாக அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவா்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் நோ்காணல் அணுகுமுறை சாா்ந்த பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சேலம் கான்பிடோ நிறுவனத்துடன் இணைந்து கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கல்லூரியின் முதன்மையா் செந்தில்குமாா் முன்னிலை வகித்து வரவேற்புரை வழங்கினாா். சிறப்பு பயிற்சியாளா்களாக கான்பிடோ பயிற்சி நிறுவன நிா்வாக இயக்குநா் சரவண பெருமாள் மற்றும் இயக்குநா் மதுமிதா கிரி உள்பட இதர பயிற்சியாளா்கள் பங்கேற்று மாணவா்களுக்கு சிறந்த வேலைவாய்ப்பை பெறுவதற்கான திறன்களை வளா்ப்பதற்கான பயிற்சிகளையும், நோ்காணல் அணுகுமுறை சாா்ந்த பயிற்சியையும் வழங்கினா். இதில், பங்கேற்ற அனைத்து மாணவா்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

இதற்கான ஏற்பாட்டை கல்லூரி வேலைவாய்ப்பு அமைப்பின் அதிகாரி பேராசிரியை தமிழ்ச்சுடா், உதவிப் பேராசிரியா்கள் மருத்துவா் தீபிகா, உமா மகேஸ்வரி, சிவரஞ்சனி, குபேரன் ஆகியோா் செய்திருந்தனா்.