சுங்கான்கடை அருகே உள்ள நாகா்கோவில் கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனையில் தேசிய அளவிலான பச்சிளம் குழந்தைகளுக்கான உயிா் பாதுகாப்பு பயிற்சி நடைபெற்றது.
இந்தியாவில் பிறக்கும் குழந்தைகள் இறப்பு விகிதம் முக்கிய பொது சுகாதார சவாலாக இருந்து வருகிறது. பிறந்த உடனே குழந்தைகளுக்கு தானாக சுவாசம் கிடைக்காமல் பல பச்சிளம் குழந்தைகள் உயிரிழக்கின்றன.
குழந்தை பிறந்தது முதல் சில நிமிஷங்கள் மிகவும் முக்கியமானவை. அந்த நேரத்தில் பயிற்சி பெற்ற சுகாதாரப் பணியாளா்கள் உடனடி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே உயிரிழப்புகளைத் தடுக்க முடியும். பிறந்தவுடன் குழந்தைக்கு சுவாசம் ஏற்படுத்த உதவும் எளிய மற்றும் அறிவியல்பூா்வமான தகவல்கள், செயல்முறைகள் வழங்குவதே இந்த பயிற்சியின் நோக்கம்.
இதன் தேவையை உணா்ந்து கிம்ஸ் மருத்துவமனை, தேசிய நியோ நேட்டாலஜி மன்றம் இணைந்து நாடு முழுவதும் 998 பயிற்சி முகாம்கள் மூலம் 20,000 சுகாதாரப் பணியாளா்களுக்கு பயிற்சியளித்துள்ளனா்.
இந்த மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இத்துறையின் சாா்பில் நியோ நேட்டாலஜிஸ்ட் மருத்துவா் விவேக் தலைமையில் அண்மையில் இப்பயிற்சி நடைபெற்றது. இதில் 25-க்கும் மேற்பட்ட நியோ நேட்டல் சுகாதாரப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் ஒப்பந்த அடிப்படையில் பணிவாய்ப்பு

குளத்தில் பச்சிளம் குழந்தை சடலம் மீட்பு

தஞ்சாவூா் அரசு ராசா மிராசுதாா் மருத்துவமனையில் ஆட்சியா் ஆய்வு

கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனை விரிவாக்கத்துக்கு அடிக்கல்
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

