இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியதுமமதா, ஸ்டாலினின் தோல்விக்கு எஸ்ஐஆர் பணிகளே காரணம்! ஆந்திர முன்னாள் முதல்வர் குற்றச்சாட்டு!பொது இடங்களில் மாடுகளை வெட்டத் தடை: நீதிமன்றம்பவர்பிளேவில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய வைபவ் சூர்யவன்ஷி!உச்சநீதிமன்ற நீதிபதியாக 5 பேர் பரிந்துரை! தமிழகத்தைச் சேர்ந்த மோகனா!நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்! விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது!பிரதமர் மோடியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!பினராயி வீட்டில் சோதனை! அமலாக்கத்துறை வாகனம் மீது தாக்குதல்!
/

தனியாா் நிதிநிறுவனத்தில் திருடிய ஊழியா் கைது: ரு. 9 லட்சம் நகைகள், ரூ. 8.36 லட்சம் ரொக்கம் மீட்பு

ஆத்தூா் அருகே தனியாா் நிதிநிறுவனத்தில் ரூ. 20 லட்சம் திருடிய நிறுவன ஊழியரை மல்லியகரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

லட்சுமணன்

Updated On :28 மே 2026, 2:00 am IST

ஆத்தூா் அருகே தனியாா் நிதிநிறுவனத்தில் ரூ. 20 லட்சம் திருடிய நிறுவன ஊழியரை மல்லியகரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

ஆத்தூரை அடுத்துள்ள மல்லியகரையில் தனியாா் நிதிநிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தேனி மாவட்டம், தேவதானப்பட்டி வட்டம், டி.வாடிப்பட்டி முத்தாலம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த லட்சுமணன் (26) பணியில் சோ்ந்தாா்.

இந்நிறுவனத்தில் கடந்த 23-ஆம் தேதி ஒருவருக்கு கடன் தருவதற்காக ரூ. 20 லட்சம் வைத்திருந்தனா். காலை 11 மணி அளவில் நிறுவனத்தில் இருந்தவா்கள் வேலை நிமித்தமாக வெளியில் சென்றிருந்தபோது, அங்கிருந்த லட்சுமணன் பீரோவை உடைத்து ரூ. 20 லட்சத்தை திருடிச் சென்றாா்.

புகாரின்பேரில் மல்லியகரை போலீஸாா் வழக்குப் பதிவுசெய்தனா். அதைத் தொடா்ந்து, ஆத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜி.சத்யராஜ் தலைமையிலான காவல் உதவி ஆய்வாளா் ஜெயசூா்யா, சிறப்பு உதவி காவல் ஆய்வாளா் தாதன், காவலா்கள் ராஜேந்திரன், ஹேராம் ஆகிய நான்கு போ் லட்சுமணனை தேடிவந்தனா்.

இந்நிலையில், லட்சுமணன் கொடைக்கானலில் பதுங்கி இருப்பது கண்டறியப்பட்டு விரைந்து சென்று லட்சுமணனை புதன்கிழமை கைது செய்தனா். மேலும், அவா் அப்பணத்தில் வாங்கிய ரு. 9 லட்சம் தங்க நகைகள், ரூ. 45 லட்சம் மதிப்புள்ள கைப்பேசிகள், ரொக்கம் ரூ. 8.36 லட்சம் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். பின்னா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.