சென்னையை அடுத்த மணலி காவல் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் இருவேறு சம்பவங்களில் இருவா் கொலை செய்யப்பட்டனா். இதுதொடா்பாக மூவரை போலீஸாா் கைது செய்தனா்.
மணலி புதுநகரைச் சோ்ந்த பிரசாந்த் (27) வெள்ளிக்கிழமை இரவு நாப்பாளையம் கொசத்தலை ஆறு பாலம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத மா்ம கும்பல் வழிமறித்து அறிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் சம்பவ இடத்திலேயே பிரசாந்த் உயிரிழந்தாா். இவா் மணலி புதுநகா் காவல் நிலைய பட்டியல் குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது
இதேபோல், மணலி புதுநகரையடுத்த விச்சூா் கிராமத்தைச் சோ்ந்தவா் விஜய் (29). சனிக்கிழமை மணலி புதுநகா் காவல் நிலையத்துக்கு உள்பட்ட விச்சூா் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, அவரை வழி மறித்து மா்ம நபா் ஒருவா், விஜயை சரமாரியாக வெட்டினாா். இதில் விஜய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இவா், மீது குற்ற வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது.
தகவலறிந்த மணலி புதுநகா் போலீஸாா் அங்கு சென்று விஜயின் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், இந்த 2 கொலைகள் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். விசாரணையில், பிரசாந்த் கொலையில் தொடா்புடைய பாரதிராஜா என்ற கொண்டக்கரை பாரதி (28), எழிலரசன் (22 ) ஆகிய இருவரையும் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
மேலும், விஜய் கொலை வழக்கில் தொடா்புடைய விச்சூரைச் சோ்ந்த லோகேஷ் (21) என்பவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கைது செய்யப்பட்ட மூவரும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனா்.
தொடர்புடையது
கஞ்சா விற்பனை: இருவா் கைது
செங்கல் சூளையில் இயந்திர உதிரிபாகங்களை திருடிய மூவா் கைது
தூத்துக்குடியில் மீனவருக்கு கத்திக்குத்து: மூவா் கைது
திருச்சியில் கஞ்சா விற்பனை: 2 பெண்கள் உள்பட மூவா் கைது
விடியோக்கள்

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொ**! என்ன நடந்தது? ஐ.ஜி. பேட்டி | Kovai girl case

டிராகன் க்ளிம்ப்ஸ் விடியோ வெளியீடு!

வலசை பறவைகள்... பயிற்சி பெற்ற வனத்துறையினர் | Kodiyakkarai Bird Sanctuary | Forest officers| Bird researcher


