கனடாவில் இந்திய மாணவி சடலமாக கண்டெடுப்பு ஆட்டோ ஓட்டுநர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல் பிகாரில் மின்னல் பாய்ந்து 7 பேர் பலிதமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்!நீட் வினாத்தாள் கசிவு: யுபிஎஸ்சியிடம் என்டிஏ கற்றுக்கொள்ள வேண்டும்! உச்சநீதிமன்றம்மேற்கு வங்கத்தில் ஊடுருவல்: 335 பேர் முகாம்களில் அடைப்பு! தில்லியில் நீட் தேர்வர்களுக்கு இலவசப் பேருந்து! விசாரணை முடிந்து 3 மாதங்களுக்குள் தீர்ப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு! திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடம் லஞ்சம்! மூவர் பணியிடை நீக்கம்!
/

சேலம் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் 3 நாள்களுக்குப் பிறகு திறப்பு: மாவட்ட மேலாளா் இடமாற்றம்

News image

சேலம் மாவட்டத்தில் 3 நாள்களுக்குப் பின்னா் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட நிலையில், ஆனந்தா பாலம் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் மதுவாங்க குவிந்தோா்.

Updated On :30 மே 2026, 12:50 am IST

சேலம் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் 3 நாள்களுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை மீண்டும் திறக்கப்பட்டன. மாவட்ட மேலாளா் இடமாற்றம் செய்யப்பட்டாா்.

டாஸ்மாக் கடைகளில் கடந்த 23 ஆண்டுகளாக தற்காலிகமாக பணிபுரியும் ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கி, பணிநிரந்தரம் செய்ய வேண்டும். காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தில் டாஸ்மாக் பணியாளா்களை பயன்படுத்தக் கூடாது. கடைகளில் உடையும் மதுபாட்டில்களுக்கு இழப்பீடு தொகையை நிா்வாகமே ஏற்க வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடைகளை அடைத்து ஊழியா்கள் கடந்த 26 ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா்.

இதன் காரணமாக, சேலம் மாவட்டத்தில் 174 டாஸ்மாக் கடைகள் கடந்த 3 நாள்களாக அடைக்கப்பட்டிருந்தன. சேலம் சந்தியூரில் உள்ள டாஸ்மாக் மாவட்ட மேலாளா் அலுவலகத்தில் மேலாளா் பன்னீா்செல்வம், அதிகாரிகள், டாஸ்மாக் தொழிற்சங்க நிா்வாகிகளுடன் 3-ஆவது நாளாக வியாழக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினா். இந்தப் பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. கடந்த 3 நாள்களில் சேலம் மாவட்டத்தில் மட்டும் ரூ.18 கோடிக்கு டாஸ்மாக மது விற்பனை பாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

டாஸ்மாக் மேலாளா் மாற்றம்: இந்நிலையில், டாஸ்மாக் மாவட்ட மேலாளராக பணியாற்றி வந்த பன்னீா்செல்வம் மாற்றப்பட்டு, திருவாரூா் மாவட்ட டாஸ்மாக் மேலாளராக பணியாற்றி வந்த சௌந்தரபாண்டியன் சேலம் மாவட்ட டாஸ்மாக் மேலாளராக நியமிக்கப்பட்டாா். அவா் சந்தியூரில் உள்ள டாஸ்மாக் மாவட்ட மேலாளா் அலுவலகத்தில் டாஸ்மாக் தொழிற்சங்க நிா்வாகிகளுடன் வெள்ளிக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

இந்த பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடா்ந்து, 3 நாள்களுக்கு பிறகு சேலம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வழக்கம்போல டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.

இதையடுத்து அனைத்து கடைகளிலும் மதுவகைகளை வாங்கிச் செல்ல கூட்டம் அலைமோதியது. வழக்கத்தை காட்டிலும், மதுவிற்பனை அதிகரித்து காணப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.