விவசாயிகளுக்கு துல்லிய பண்ணையத் திட்ட பயிற்சி முகாம்

பெரியகுளம், ஜன. 8:÷தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் நீர்வள மற்றும் நிலவளத் திட்டம் சார்பில் பெரியகுளம் தோட்டக் கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் விவசாயிகளுக்கு துல்லிய பண்ணையத் திட்டம் குற
Updated on
1 min read

பெரியகுளம், ஜன. 8:÷தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் நீர்வள மற்றும் நிலவளத் திட்டம் சார்பில் பெரியகுளம் தோட்டக் கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் விவசாயிகளுக்கு துல்லிய பண்ணையத் திட்டம் குறித்த பயிற்சி முகாம் புதன்கிழமை துவங்கி 3 நாள்கள் நடைபெற்றன.

÷கல்லூரி முதல்வர் வி.பொன்னுச்சாமி முகாமுக்குத் தலைமை வகித்தார். முனைவர் ஏ.ரத்தினசாமி முன்னிலை வகித்தார்.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக நீர்வள, நிலவள திட்ட தலைவர் பி.எஸ்.பாண்டியன் முகாமைத் தொடக்கி வைத்தார். முனைவர் ஆர்.நாகேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ÷முகாமில் விவசாயிகளுக்கு சொட்டு நீர்ப்பாசனம் அமைக்கும் முறை மற்றும் பராமரிப்புக் குறித்து வேளாண் பொறியாளர்கள் விளக்கிக் கூறினர்.

மேலும், சொட்டு நீர்ப்பாசனம் அமைக்கப்பட்டுள்ள வயல்களில் விவசாயிகளுக்குச் செயல்விளக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com