ஆனால், இவ்வளவு காலமாக இருந்த நடைமுறையை மாற்றி, இந்த முறை அந்த விலைப் புள்ளிகளை அதிகாரிகள் திருத்தி, திருத்தப்பட்ட விலைக்குதான் விற்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதாகக் கூறப்படுகிறது. உதாரணமாக 6 மாதமாக வந்த தினசரி சுமார் 20 கிலோ எடை வருகிறது என்றால், அதற்கு சராசரி விலையாக கிலோ ரூ.4 எனக் கணக்கிடப்பட்டு ரூ.80-க்கு விலைப் புள்ளி அனுப்பப்படுகிறது என்றால். அதிகாரிகள் அதன் எடையை 35 கிலோ எனப் போட்டு விலையையும் ரூ.5.50 எனத் திருத்தி விற்பனை ஆணை வழங்கி அதற்கான விலையைச் செலுத்துமாறு வற்புறுத்துகின்றனராம்.