விஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி பிரதமர் மோடி சென்ற பாதையில் ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுப்பு: 6 காவலர்கள் பணியிடை நீக்கம்தமிழ்நாடு காவல்துறை எந்த பாடத்தையும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை: அண்ணாமலைஎண்ணெய் வணிக நிறுவனங்கள் நஷ்டத்தை மட்டுமே பகிர்கின்றன: மாணிக்கம் தாகூர் தங்கம் விலை உயர்வு! எவ்வளவு?
/

மதுரையில் தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டி தொடக்கம்

  மதுரை மாவட்ட கூடைப்பந்து அசோசியேஷன் மற்றும் பெகாசஸ் கூடைப்பந்து கிளப் ஆகியன இணைந்து நடத்தும், வி.வி.டி. சுழற்கோப்பைக்கான தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டி சனிக்கிழமை துவங்கியது.

Updated On :12 மே 2013, 6:01 am IST

  மதுரை மாவட்ட கூடைப்பந்து அசோசியேஷன் மற்றும் பெகாசஸ் கூடைப்பந்து கிளப் ஆகியன இணைந்து நடத்தும், வி.வி.டி. சுழற்கோப்பைக்கான தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டி சனிக்கிழமை துவங்கியது.

  பசுமலை சி.எஸ்.ஐ. பள்ளி மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பெகாசஸ் கிளப் தலைவர் வி.வி.ஆர். ராஜ்சத்யன் வரவேற்றார். இதில், சிறப்பு அழைப்பாளராக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ கலந்துகொண்டு, போட்டியைத் துவக்கி வைத்தார்.

  தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜெ. சந்திரகாந்தா ஜெயபாலன், பேராசிரியர் கு. ஞானசம்பந்தன், அப்பலோ மருத்துவமனை டாக்டர் ரோகிணி ஸ்ரீதர் ஆகியோர் குத்துவிளக்கேற்றி, சிறப்புரை ஆற்றினர். நிகழ்ச்சியில், மாவட்டக் கூடைப்பந்து அசோசியேஷன் தலைவர் சீனிமொகைதீன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

  இப்போட்டிகள் வரும் 16 ஆம் தேதி (வியாழக்கிழமை) வரை நடைபெறுகின்றன. இதில், விஜயா வங்கி அணி, கேரள ஸ்டேட் போலீஸ் அணி, ஐ.ஓ.பி. அணி, இந்தியன் வங்கி அணி உள்பட தேசிய அளவில் 16 அணிகள் பங்கேற்கின்றன.

  போட்டியானது, தினமும் மாலை 5 மணிக்கு தொடங்கி இரவு 10 மணி வரை நடைபெறும். முதல் பரிசாக சுழற்கோப்பை மற்றும் ரூ. 25 ஆயிரம், 2 ஆவது பரிசாக சுழற்கோப்பை மற்றும் ரூ. 15 ஆயிரம், 3 ஆவது பரிசாக சுழற்கோப்பை மற்றும் ரூ. 10 ஆயிரம், 4 ஆவது பரிசாக சுழற்கோப்பை மற்றும் 5 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.