இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

மதுரை காவல் துறையினரின் வாரிசுகளுக்கு ரூ.13.50 லட்சம் கல்வி நிதியுதவி வழங்கல்

மதுரை காவல் துறையில் பணிபுரிவோரின் பிள்ளைகளின் கல்விக்கான உதவித்தொகை ரூ.13.50 லட்சத்தை மாநகர் காவல் ஆணையர் சஞ்சய் மாத்தூர் சனிக்கிழமை வழங்கினார்.

Updated On :12 மே 2013, 6:01 am IST

மதுரை காவல் துறையில் பணிபுரிவோரின் பிள்ளைகளின் கல்விக்கான உதவித்தொகை ரூ.13.50 லட்சத்தை மாநகர் காவல் ஆணையர் சஞ்சய் மாத்தூர் சனிக்கிழமை வழங்கினார்.

  ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் காவல் துறையில் பணிபுரியும், காவலர்கள் முதல் ஆய்வாளர்கள் உள்ளிட்டோரின் பிள்ளைகளுக்கு கல்வி உதவித் தொகை அளிக்கப்படுகிறது.

அதனடிப்படையில், கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி மதுரை ஆயுதப்படை மைதானத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது.

   நிகழ்ச்சியில் மாநகர் குற்றப்பிரிவு துணை ஆணையர் பெரோஸ்கான் அப்துல்லா வரவேற்றுப் பேசுகையில், அரசு வழங்கும் இந்த உதவித்தொகை மாணவ, மாணவியருக்கு ஊக்கமளிப்பதாக அமையும். தொழிற்கல்வி, கலை, அறிவியல் முதுகலை, இளங்கலை மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கு உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன என்றார்.

   பொறியியல், தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றை படித்த 81 பேருக்கு தலா ரூ.10 ஆயிரமும், எம்.சி.ஏ., எம்.ஏ., உள்ளிட்ட பிரிவில் படிக்கும் 22 பேருக்கு தலா ரூ.7,500,  எம்.காம்., எம்.எஸ்.சி, எம்.ஏ. படிக்கும் 12 பேருக்கு தலா ரூ.4,500, பி.எஸ்.சி., பி.காம்., படிப்போர் 59 பேருக்கு தலா ரூ.4 ஆயிரம், டிப்ளமோ மற்றும் பி.எட்., படிக்கும் 29 பேருக்கு தலா ரூ.3500 வழங்கப்பட்டதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 கல்வி உதவித்தொகை பெறுவதற்காக போலீஸாரும் போலீஸ் அதிகாரிகளும் தங்களது பிள்ளைகளுடன் வந்திருந்தனர்.

  நிகழ்ச்சியில், உதவி ஆணையர்கள் கணேசன் (திலகர் திடல்),  மகுடபதி (போக்குவரத்து), தனபால் (தல்லாகுளம்) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.