மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

ரேபீஸ் தினம்: 1,026 செல்லப் பிராணிகளுக்கு இலவசமாக தடுப்பூசி

உலக ரேபீஸ் தினத்தையொட்டி, மதுரையில் 1,026 செல்லப் பிராணிகளுக்கு திங்கள்கிழமை இலவசமாக தடுப்பூசி போடப்பட்டது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:27 pm

DIN

உலக ரேபீஸ் தினத்தையொட்டி, மதுரையில் 1,026 செல்லப் பிராணிகளுக்கு திங்கள்கிழமை இலவசமாக தடுப்பூசி போடப்பட்டது.

மதுரை மாவட்டத்தில் உள்ள கால்நடை மருத்துவமனைகள், கால்நடை மருந்தகங்களில் இலவசமாக வெறிநோய்த் தடுப்பூசி போடப்பட்டது. தல்லாகுளத்தில் உள்ள பன்முக கால்நடை மருத்துவமனை, பழங்காநத்தம் மற்றும் திருப்பரங்குன்றம் கால்நடை மருந்தகங்களில் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.

பழங்காநத்தம் மற்றும் திருப்பரங்குன்றம் கால்நடை மருந்தகங்களில் கால்நடை மருத்துவா்கள் ஏ. ஜெயகோபி, ஜி. சிவக்குமாா், மெரில் ராஜ், வீரமணிகண்டன், நாகஜோதி, விஜிபிரியா ஆகியோா் தடுப்பூசி பணிகளில் ஈடுபட்டனா். இவ்விரு இடங்களிலும் 447 செல்லப் பிராணிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

பன்முக மருத்துவமனையில், மாவட்ட ஆட்சியா் டி.ஜி. வினய் முகாமைத் தொடக்கி வைத்தாா். அப்போது, சில செல்லப் பிராணிகளுக்கு ஆட்சியா் தடுப்பூசி செலுத்தினாா். இந்த முகாமில், 579 செல்லப் பிராணிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதில், கால்நடைப் பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் ஆா். ராஜதிலகன், துணை இயக்குநா் ரவிச்சந்திரன், முதன்மை மருத்துவா் கே. வைரவசாமி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.