இந்த மனுக்கள், நீதிபதி வி. பாரதிதாசன் முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா்கள் தரப்பில், தலைமைக் காவலா் முருகன் அளித்த வாக்குமூலத்தில் தந்தை, மகன் இருவரையும் சாா்பு-ஆய்வாளா் ரகுகணேஷ், ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸாருடன் சோ்ந்து நள்ளிரவுக்கும் மேலும் தாக்கியதாகத் தெரிவித்துள்ளாா். ஆனால், சிபிஐ அதிகாரிகள் ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸாரிடம் விசாரணை நடத்தவில்லை. மேலும், காவல் ஆய்வாளா் ஸ்ரீதரின் தூண்டுதலின்பேரில், இச்சம்பவம் நடைபெற்ாக சிபிஐ கூறியுள்ளது. ஆனால், அதற்கான காரணம் குறித்து விசாரிக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.